புதுச்சேரியில் 3 ரவுடிகள் வெடிகுண்டு வீசி வெட்டிப் படுகொலை.. பழிக்குப்பழி கொலை!
புதுச்சேரியில் மூன்று ரவுடிகள் வெடிகுண்டு வீசியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி: மூன்று ரவுடிகள் வெடிகுண்டு வீசியும் சரமாரியாக வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் ரவுடிகளுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 3 பேர் வெடிகுண்டு வீசியும், வெட்டியும் கொலை செய்யப்பட்டனர்.
ரவுடிகள் ஜெரால்டு, சேகர் மற்றும் சதீஷ் ஆகியோரை வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர். அவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட ரவுடிகள் ஜெரால்டு, சேகர் மற்றும் சதீஷ் ஆகியோர் ரவுடி பொரையூர் சுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் ஆவர். இவர்கள் மீது மேலும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனால் முன்பகைக்காரணமாக பழிக்குப் பழியாக மூன்று பேரும் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கான புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மூன்று ரவுடிகள் வெடிகுண்டு வீசியும் சரமாரியாக வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.