மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்திய பெண்கள் - மடக்கி பிடித்த போலீசார்
தூத்துக்குடி: மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தி வந்த மூன்று பெண்களை போலீசார் துணிச்சலாக மடக்கி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.
மதுரையிலிருந்து தூத்துக்குடி கஞ்சா கடத்தி வருவதாக தாளமுத்து நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ ஆதிலட்சுமி, நடராஜன், மற்றும் போலீசார் தாய்நகரில் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்குள்ள ஒரு வீட்டில் சந்தேகமாக தங்கியிருந்த மூன்று பெண்களின் பைகளை சோதனையிட்டனர். அதில் மிக்சர் பொட்டலம் போல் கஞ்சாவை பார்சல் செய்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸ் விசாரணையில் அவர்கள் தாய்நகரை சேர்ந்த ரென்சியா, அவரது மகள் நர்மதா, மற்றும் ஆரோக்கியமேரி என தெரிய வந்தது. அவர்கள் மதுரையில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து தூத்துக்குடியில் சப்ளை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்ய போலீசார் அவர்களிடம் இருந்து இரண்டரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செயதனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுபோல் மதுரையிலிருநது தூத்துக்குடி கஞ்சா கடத்தி வந்த செல்வி என்பவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இதனால் போலீசாரின் பார்வை தற்போது மதுரையை நோக்கி திரும்பியுள்ளது.












Click it and Unblock the Notifications