கோடம்பாக்கம் அருகே மின்சார ரயில் மோதி 3 பேர் பலி
சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் மோதியதில் 3 இளைஞர்கள் பலியாகினர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மின்சார ரயில் மோதியதில் 3 இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.
கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் கார்த்தி, மனோஜ் மற்றும் பிரசாந்த். இவர்கள் மூவரும் கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தை நேற்றிரவு கடக்க முயன்றனர்.

அப்போது அங்கு வேகமாக வந்த மின்சார ரயில் அவர்கள் மீது மோதியதில் 3 பேரும் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தனர். இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் மூவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் வருவதை கவனித்திருக்க மாட்டார்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.












Click it and Unblock the Notifications