சுற்றுலா மையத்திற்குள் திடீரென புகுந்த புலி.. அலறி அடித்து வெளியேறிய மக்கள்.. ஊட்டியில் பரபரப்பு!
உதகை: நீலகிரி மாவட்டம் உதகை அருகே தலைகுந்தா பைன் ஃபாரஸ்ட் சுற்றுலா மையத்தில் புலி புகுந்ததால் அப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி - கூடலூர் சாலையில் உள்ள தலைகுந்தா பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா மையத்தில் புலி புகுந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. அப்பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா மையம் 2 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் அப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், புலி நடமாட்டத்தைக் கண்டறியும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா மையத்தில் புலி நடமாடுவது தொடர்பாக சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உதகையின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்லக்கூடிய பைன் பாரஸ்ட் சூழல் சுற்றுலா மையத்தில் புலி நடமாட்டத்தால் பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications