காட்டெருமை இறைச்சியில் விஷம் வைத்து புலியைக் கொன்ற மூவர் – வனத்துறையால் கைது

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: சத்தியமங்கலத்தில் காட்டெருமை இறைச்சியில் விஷம் வைத்து புலியை கொன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரம் பாலத்துறை வனப்பகுதியில் காட்டெருமை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

Tiger killed by 3 culprits in Erode…

இதையடுத்து பவானிசாகர் வனச்சரக அலுவலர் சிவசுப்பிரமணியம், தலமலை வனச்சரக அலுவலர் ராமராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, காட்டுப்பகுதியில் புலியால் அடித்துக் கொல்லப்பட்ட காட்டெருமையின் உடல் கிடந்துள்ளது. அந்த காட்டெருமையின் இறைச்சியில் விஷ மருந்து கொட்டப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அந்தப்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், ஒரு இடத்தில் தோல், பற்கள் மற்றும் நகங்கள் நீக்கப்பட்ட ஒரு புலியின் சடலம் புதைத்திருப்பது தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக, அந்தப்பகுதியில் ஆடு, மாடு மேய்போரிடம் விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர், இட்டரை கிராமத்தைச் சேர்ந்த சொக்கன், பாலன், சின்னராஜ் ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.

அப்போது, காட்டெருமை இறைச்சியில் விஷம் வைத்து அவர்கள் புலியைக் கொன்றது தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்த வனத் துறையினர், அவர்களிடமிருந்து புலி நகங்கள் மற்றும் விஷப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+