புளியரை அருகே நாயை அடித்து கொன்று புலி அட்டகாசம்.. பீதியில் பொதுமக்கள் !
புளியரை அருகே அட்டகாசம் செய்து வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கோட்டை: புளியரை அருகே தோட்டத்தில் காவலுக்கு கட்டியிருந்த நாயை அடித்து கொன்று புலி அட்டகாசம் செய்து விட்டு தப்பியோடி விட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக, கேரள எல்லைப் பகுதியான நெல்லை மாவட்டம் புளியரை வனப்பகுதியிலும், குண்டாறு வனப்பகுதியிலும் சிறுத்தைகள், புலி உள்ளிட்ட மிருகங்களின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக குண்டாறு பகுதியில் உள்ள சில தனியார் தேயிலை தோட்டத்தில் கட்டிப் போட்டிருந்த நாய்களை புலி கொன்று விட்டு தப்பியோடியது. இதனிடையே தொழுவத்தில் கட்டியிருந்த மாட்டையும் அடித்து கொன்றது.
புலியின் தாக்குதலில் குண்டாறு பகுதியில் உள்ள சில தனியார் தோட்டங்களில் கட்டிப் போட்டிருந்த நாய்களை கொண்டு தூக்கி செல்லும் நிகழ்வுகளும், மாட்டை கொன்று தின்று விட்டு சம்பவங்களும் நடந்து வருகின்றன. மேலும் தென்மலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எக்கோ டூரிசம் சூழல் பார்க் அருகே கடந்த சில நாட்களாக சிறுத்தை மற்றும் புலி நடமாட்டம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியில் இரண்டு நாய்களை புலி தூக்கிசென்றது. மேலும் ராஜன் என்பவர் தனது தோட்டத்தில் காவலுக்காக வளர்த்து வந்த ஒரு நாயை புலி அடித்து கொன்று விட்டு தப்பிச் சென்றது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அங்கு வந்து காட்டுப்பகுதிக்குள் சென்று தேடிப்பார்த்தனர். இந்தநிலையில் தப்பி சென்ற புலியை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications