Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்செந்தூர் முருகன் கோயில் கருவறையை வீடியோ எடுத்த ஜெயிலர் பட நடிகர்! போலீஸில் புகார்!

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவரை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டதாக திரைப்பட துணை நடிகரும் இன்ஸ்டா பிரபலமுமான செல்வா மீது கோயில் நிர்வாகம் போலீஸில் புகார் அளித்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் துணை நடிகராக நடித்தவர் செல்வா. இவர் இன்ஸ்டா பிரபலமாகவும் இருந்து வருகிறார். இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சில தினங்களுக்கு முன்னர் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். அவர் திருச்செந்தூருக்கு சென்று வந்த பயணத்தை வீடியோவாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

tiruchendur murugan temple

அதில் அவர் திருச்செந்தூர் ரயில் நிலையத்திற்கு வருவதும், அங்கு புகைப்படம் எடுப்பதுமாக இருந்தார். பின்னர் கடற்கரையில் குளித்துவிட்டு நெற்றியில் திருநீர் பட்டையிட்டுக் கொண்டு அவர் பச்சை வேட்டியில் கோயிலுக்கு சென்றார்.

அங்கு மேல் சட்டையில்லாமல் சென்ற அவர் கோயிலுக்குள் ஒரு பையுடன் சென்றார். பிறகுதான் அந்த வீடியோவில் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த வீடியோவில் மூலவரின் காட்சிகளும் வெளியாகியிருந்தது. மேலும் அவர் பக்தர்களுடன் செல்ஃபி எடுத்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இதை பார்த்த பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அதிர்ச்சி! அதாவது கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லாத நிலையில் இவர் எப்படி எடுத்துச் சென்றார், எல்லாவற்றுக்கும் மேல் மூலவரை எந்த கோயிலிலும் புகைப்படமோ வீடியோவோ எடுக்கக் கூடாத நிலையில் இவர் எப்படி எடுத்தார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

tiruchendur murugan temple

இந்த வீடியோ வைரலான நிலையில் செல்வா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகத்தினர் புகார் அளித்துள்ளனர். கோயிலின் புனிதத் தன்மையை காக்க பக்தர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கோயில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டனர்.

திருச்செந்தூர் முருகன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் செல்போனை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்போனை பாதுகாப்பு பெட்டகத்தில் ஒப்படைத்துவிட்டு பிறகு சுவாமி தரிசனம் செய்துவிட்டுதான் அதை பெற்றுக் கொள்ள முடியும்.

அப்படியிருக்கும் பட்சத்தில் திருச்செந்தூரில் எப்படி செல்போன் அனுமதிக்கப்பட்டது என்ற கேள்வியும் எழுகிறது. இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் தங்கள் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

tiruchendur murugan temple

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா மற்றும் விடுமுறை தினங்களில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்தும் பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.

கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் குடும்பத்துடன் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த கோயிலில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் காரணமாக 50 அடிக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே உள்ள பாசிபிடித்த பாறைகள் தெரிய ஆரம்பித்துள்ளன.

மேலும் அவ்வப்போது சுவாமி சிலைகளும் கல்வெட்டுகளும் கிடைப்பதால் பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்துள்ளனர். கோயில் கல்வெட்டுகளில் பல்வேறு தகவல்கள் இருப்பதால் அவற்றை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் துணை நடிகர் ஒருவர் கோயிலின் கருவறையையே வீடியோ எடுத்து இன்ஸ்டா ரீல்ஸில் போட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+