தமிழகம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில்: சென்னை 105, திருச்சியில் 107 டிகிரி கொளுத்துகிறது
சென்னை: தமிழகத்தின் 10க்கும் மேற்பட்ட நகரங்களில் இன்று வெயில் 103 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக திருச்சியில் 107 டிகிரி வெயில் சுட்டெரித்தது. சென்னையில் சில நாட்களாக வெயில் மிதமாக இருந்த நிலையில் இன்று 105 டிகிரி கொளுத்தியது. தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர் மதுரை, சேலம், உள்ளிட்ட இடங்களிலும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் இருந்தது.

வெள்ளிக்கிழமை பதிவான வெயில் அளவு 4 மணி நிலவரம் ( ஃபாரன்ஹீட்டில்):
இன்றைய வெப்பநிலை
சென்னை : 105
மதுரை : 102
திருச்சி : 107
கோவை : 100
திருப்பூர் : 101
சேலம் : 103
வேலூர் : 104
ஈரோடு : 104
கரூர் : 105
கிருஷ்ணகிரி : 100
தருமபுரி : 102
தஞ்சாவூர் : 101
கடலூர் : 100
திண்டுக்கல் : 103
விருதுநகர் : 103
திருநெல்வேலி : 95
தூத்துக்குடி : 99
கன்னியாகுமரி : 94
கொடைக்கானல் : 78
உதகமண்டலம் : 75
காலை முதலே வெயில் சுட்டெரித்து வருவதால் சாலைகளில் கானல் நீரோடுகிறது. வாகனங்களில் செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அக்னி நட்சத்திரம் தொடங்க இன்றும் இரு வாரங்கள் உள்ள நிலையில் அனலாய் வெயில் தகிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
மேற்கில் இருந்து வறண்ட தரைக்காற்று வீசுவதால் வடமாவட்டங்களில் அதிக அளவு வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் இதனை தெரிவித்தார். ஈரப்பதம் குறைந்த தரைக்காற்றால் வடமாவட்டங்களில் 2 லிருந்து 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications