திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை சுரங்கபாதையில் மே 14 ல் மெட்ரோ ரயில் சேவை
சென்னையில், திருமங்கலம் முதல் நேருபூங்கா வரை மே 14 முதல் மெட்ரோ ரயில் சேவை துவங்க உள்ளது.
சென்னை: சென்னையில், திருமங்கலம் முதல் நேருபூங்கா வரை உள்ள வழித்தடத்தில் ஞாயிறு முதல் மெட்ரோ ரயில் சேவை துவங்க உள்ளது. துவக்க விழாவில் முதல்வர் பழனிசாமி, மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
சென்னையில் இரு வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 19 ரயில் நிலையங்களுடன் 24 கி.மீ. சுரங்க வழிப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
உயர்த்தப்பட்ட பாதையில் விமான நிலையம் - சின்னமலை - கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை ஒரு வழிதடத்தில் இயக்கப்படுகிறது.

கோயம்பேடு - நேரு பூங்கா
கோயம்பேடு - நேரு பூங்கா வரையிலான முதலாவது மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பணி முடிவடைந்து கடந்த சில மாதங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. சுரங்கப் பாதையில் ஆய்வு மேற்கொண்ட தெற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் மெட்ரோ ரயில்களை இயக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

சுரங்க பாதையில் ரயில்
இதில் 7.63 கி.மீ., தூரம் வரை சுரங்க பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் உள்ள திருமங்கலம், அண்ணா நகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் ஆகிய 6 சுரங்க ரயில் நிலையங்கள் உள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
டிக்கெட் கவுன்ட்டர், குடிநீர், கண்காணிப்பு கேமராக்கள், காற்றோட்ட வசதி, தானியங்கி சிக்னல், தீ மற்றும் புகையை அணைத்தல் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பகுதியில் ரயில் கட்டணம் ரூ.40 ஆக நிர்ணயம் செய்யப்படும் எனக்கூறப்படுகிறது.

மே 14ல் ரயில் இயக்கம்
வரும் 14 ஆம் தேதி சுரங்கவழி மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடக்கவிழாவில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் மிக நீண்ட சுரங்கப்பாதை என்பதால் சென்னைவாகிகள் இதில் பயணம் செய்ய மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications