இன்றய சுவையில் சிறுதானியங்கள் உணவு வகைகள் ஆன்லைனிலும்... குதிரைவாலி தோசை இதுதான் இப்ப ட்ரன்டுங்க...
நம் தமிழர் பண்பாடும் ஆரோக்கியத்திற்க்கான ரகசியம் " உணவே மருந்து" இதை உணர்ந்து துவங்க பட்டதுதான் www.nativcrush.com.
அதை மெயப்பிக்கும் வகையில் நமது முன்னோர்களின் உணவு முறை சிறுதானியங்கள் நிறைந்ததாக இருந்துள்ளது. ஆனால் இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்கு காரணம் மாறி வரும் உணவுப் பழக்கம் தான். இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரமாகி விட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறி விட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாற வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
சிறுதானியம் என்றால் என்ன ?
உணவு தானியங்களில், அளவில் சிறிய விதைகளைக் கொண்டவை சிறுதானியங்கள் என்று அழைக்கிறோம். சிறு தானிய வகைகள் நமது ஊரில் உள்ள அணைத்து இடங்களிலும் வளர கூடியது. வரட்சியான இடங்களிலும், இந்த சிறுதானிய வகைகள் சாதாரண மண் உள்ள இடங்களிலும் மிக சாதாரணமாக விளைய கூடியது இது மிக சாதாரணமாக 60 நாட்களில் விளையக்கூடியது.
ஏன் சிறுதானியங்கள் சாப்பிட வேண்டும்.
சிறுதானியங்கள் தான் நாம் உண்ணும் தானியங்களில் மிகவும் ஊட்டச்சத்து அதிகம் கொண்டது மற்றும் இதில் அமிலத்தன்மை என்று ஏதும் இல்லை இதனால் இது எளிதாக செரிமானம் ஆகும். உடலுக்கு ஒவ்வாமை என்ற பிரச்சனையும் வருவது இல்லை. அரிசியை விட சிறுதானியங்களை உண்ணும் பொழுது நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. சிறுதானியங்களில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின்கள், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற மினரல்களும் அடங்கியுள்ளன. இதனால் சிறுதானிய உணவு வகைகள் உண்பதால் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். குறிப்பாக கம்பு, ராகி தானியங்களில் கால்சியம் சத்து அதிகளவிலும், சோளத்தில் புரோட்டின் அதிகளவிலும், சாமை, குதிரைவாலி ஆகிய தானியங்களிலும் இரும்பு சத்து அதிகளவு உள்ளது.
என்ன வகையான சிறுதானியங்கள் உள்ளன:
·கேழ்வரகு,
·கம்பு,
·நாட்டுச்சோளம்
·வரகு,
·திணை,
·சாமை,
·குதிரைவாலி
·பனிவரகு
சில பிரபலமான சிறு தானிய உணவு வகைகள்:
·பலதானிய அடை தோசை
·ராகி தோசை
·வரகு வெந்தய தோசை
·ராகி புட்டு
·சோள புட்டு
·குதிரை வாலி முருங்கை தோசை
·சோள மிளகு தோசை
·சாமை முடக்கத்தான் தோசை
பலதானிய அடை தோசை செய்முறை
பலதானிய அடைமாவுடன் நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயத்தூள், சிறிது மஞ்சத்தூள், சிறிது உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்த பின் தோசைகல்லில் பொன்னிறமாக வேக வைத்து தேங்காய் சட்னியோடு ருசிக்கவும். சாதாரணமாக வீட்டில் பயன்படுத்தும் தேங்காய் சட்னியையே பயன்படுத்தலாம். அடை தோசையை சட்னியுடன் சேர்ந்து சாப்பிட்டால் அதன் சுவையே தனி தான் அப்படி ஒரு சுவை இருக்கும்.
இதை உண்பதால் கிடைக்கும் பயன்:
இதில் அதிக நார்சத்துஉள்ளது, மூட்டு வலியை குணமாக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்தும்.
ராகி மாவை தோசை பதத்திற்கு தண்ணீர் கலந்து கலக்கி சில மணி நேரம் ஊற வைக்கவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, நறுக்கிய மல்லி, கருவேப்பிலை பச்சைமிளகாய் கலந்து தோசைகல்லில் மிதமான சூட்டில் சுடவும், பின் தேங்காய் சட்னியோடு பரிமாறவும். தேங்காய் சட்னியுடன் சேர்த்து பரிமாறுங்கள் இந்த இரண்டும் சேர்த்து உண்ணும் பொழுது மிக மிக ருசியாக இருக்கும் இந்த ராகி தோசை.
இதை உண்பதால் அதிக கால்சியம் கிடைகிறது, சர்க்கரை நோய், இரத்த சோகை, உடல் சூடு, சரும நோய்களுக்கு மிக சிறந்தது.
இது ராகி தோசை போலவே செய்து பரிமாறலாம்.
இதை உண்பதால் மூட்டு வலி, சர்க்கரை நோய், மாதவிடாய் கோளாறுகளுக்கு மிக சிறந்தது.
இது ராகி தோசை போலவே செய்து பரிமாறலாம்.
இதை உண்பதால் சர்க்கரை நோய், ரத்த சோகை, வாய் புண், குடல் புண், இருமல், சளிகளுக்கு மிக சிறந்த உணவு.
ராகி புட்டு மாவுடன் தண்ணீர் சேர்த்து உதிரியாக கிளற வேண்டும். பின் 10 நிமிடம் பாத்திரத்தில் ஆவியில் வேக வைக்கவும், நன்றாக வெந்தவுடன் தேவையான அளவு சீனி, தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் பொடி தயாரித்து பரிமாறவும்.
இதை உண்பதால் கால்சியம் சத்து நிறைந்தது, கேட்ட கொழுப்பை குறைக்கும், உடல் ஆரோக்கியம் மேம்படும், சர்க்கரை நோயை கட்டு படுத்தும்.
சோள புட்டு ராகி புட்டு போலவே செய்யவும்.
இதன் பயன்கள் ரத்த சோகையை குணபடுத்தும், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். உடலுக்கு வலிமை கொடுக்கும்.
சோள மிளகு தோசை மிக்ஸ் மாவுடன் கொத்தமல்லி, கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து ஒரு மணி நேரம் ஊர வைத்து பின் தோசை சுட்டு சூடாக பரிமாறவும்.
இதற்கு தேவையான அணைத்து மிக்ஸ்களும் ஆன்லைனில் நேடிவ்கிருஷ்.காம் (Nativcrush.com) என்ற இணையதளத்தில் மிக குறைவான விலையில் மிக தரமானதாக கிடைக்கிறது, இன்றே வாங்குங்க ஆரோக்கிய உணவுடன் ஆரோக்கியமாக வாழுங்கள்..
தமிழகத்தில் பலதரப்பட்ட ஊர்களில் சிறப்பு வாய்ந்த நொறுக்கு தீனிகளை ஒரே நேரத்தில் வாங்க முடியாமலும் அதன் பயனை அடைய முடியாமலும் நம் மக்கள் அவசர கதியில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓட்டத்தில் துரித உணவை உண்டு உடல் நலத்தை கெடுத்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் உடல் நலத்தை காக்கவும் நேரத்தை மிச்சபடுதவும் உங்கள் தேவையை எங்கள் சேவையாக கொண்டு வெவ்வேறு ஊர்களின் சிறப்பு பெற்ற நொறுக்கு தீனிகள் இல்லம் தேடி வருகிறது நாவில் சுவை தருகிறது. உங்கள் நேடிவ்க்ருஷ்.காம் (www.nativcrush.com).
ஒவ்வொரு ஊரில் ஒரு தின்பண்டம் சிறப்பு அவற்றை ஒரே இணையதளத்தில் மிக குறைவான விலையில் விற்கிறது நமது நேடிவ்க்ருஷ்.காம். உங்களுக்கு பிடித்த மற்றும் ஆசை பட்டு உண்ண நினைத்த பல பிரபலமான தின்பண்டங்களை மிக எளிதாக ஆன்லைனில் ஆர்டர் செய்து உங்கள் வீட்டிற்கே வந்து சேரும் தின்பண்டங்களை ருசித்து மகிழுங்கள் ..
நாம் நமது சொந்த ஊர்களை விட்டு இந்தியாவின் பல இடங்களில் வேலைக்காக மற்றும் படிக்கச் சென்றுள்ளோம். அங்கு என்னதான் பல விதமான ஸ்நாக்ஸ் சாப்பிட்டு இருந்தாலும், நமது சொந்த ஊர் ஸ்நாக்ஸ்களுக்கு ஈடாகாது என்பதை உணர்ந்து, ஒவ்வொரு ஊரின் தனித்துவமான மற்றும் அனைத்து வகையான ஸ்நாக்ஸ்களையும் எல்லோரிடமும் கொண்டு சேர்க்க உருவாக்கப்பட்டது தான் Nativcrush.com