For Daily Alerts
Just In
நெல்லையை கைப்பற்றுவாரா வக்கீல் பிரபாகரன்?
திருநெல்வேலி: திருநெல்வேலி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.ஆர்.பி பிரபாகரன் வயது 35. தென்காசி அருகே கீழப்பாவூரில் வசித்து வருகிறார்.
விக்ரமசிங்கபுரத்தில் உள்ள செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ முடித்த இவர், சேலம் சட்டக்கல்லூரியில் பிஎல் படித்துள்ளார். தென்காசி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.
இவருக்கு சுதனா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தற்போது ஆலங்குளம் தொகுதி அதிமுக செயலாளராக இருக்கும் இவரை திருநெல்வேலி லோக்சபா தொகுதி எம்.பி வேட்பாளராக அறிவித்துள்ளார் ஜெயலலிதா.
கே.ஆர்.பி பிரபாகரன் இதற்கு முன்னர் அதிமுக மாணவரணி இணைச்செயலாளராகவும், மேலவைப் பிரதிநிதியாகவும் பதவி வகித்துள்ளார்.
Comments
English summary
The All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) has given its ticket to K.R.P. Prabhakaran in Tirunelveli Lok Sabha Constituency.