Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெல்லை கோர்ட் உத்தரவுப்படி அதிமுக ஒப்பந்தகாரர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் நீதிமன்ற உத்தரவின்பேரில் அதிமுக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் ஆர்.எஸ். முருகன். நாங்குநேரி கிளை அதிமுக செயலாளராக உள்ளார். அவருக்கும் குமாரசாமி என்பவருக்கும் சில தினங்களுக்கு முன் அரசு பணிகளை கான்டிராக்ட் எடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

Tirunelveli police files case against a ADMK functionary

இதனைத் தொடர்ந்து குமாரசாமி முருகன் மீது போலீசில் புகார் கொடுத்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குமாரசாமி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் முருகன் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது.

அதன்படி இன்று நெல்லை போலீசார் முருகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். முருகன் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.

அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டு வரும் நிலையில் அவரது ஆதரவாளர் சட்ட சிக்கலில் சிக்கியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+