15 சவரன் தங்க நகை.. திருப்பத்தூரில் காரில் வெயிட்டிங்கில் காதலன்.. வீட்டிற்குள் திகைத்து நின்ற கணவர்
திருப்பத்தூர்: திருமணத்துக்கு மீறிய உறவில் ஈடுபட்ட மனைவி, மனம்திருந்தி வாழ முயற்சித்துள்ளார்.. ஆனால், வீடுதேடி வந்து தொல்லை தந்துள்ளது ஒரு கும்பல்.. இவர்களை ராஜபாளையம் போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள். என்ன நடந்தது?
திருப்பத்தூர் அருகே ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன்.. இவருக்கு 38 வயதாகிறது.. கார் டிரைவராக உள்ளார்.. இவருக்கு காட்பாடி சேர்ந்த சுரேஷ் என்ற கார் டிரைவர் அறிமுகமாகியிருக்கிறார். நாளடைவில் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டார்கள்.

நண்பர்கள்: இதையடுத்து, இருவரும் காட்பாடி பகுதியிலேயே ஒன்றாக சேர்ந்து, டிரைவிங் தொழிலை செய்ய துவங்கியிருக்கிறார்கள்.. இதனால், திருப்பத்தூரிலிருந்த வீரபத்திரன், காட்பாடியில் பகுதியிலேயே, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, மனைவி சத்யாவுடன் வசித்து வந்துள்ளார்.
இதனிடையே, வீரபத்திரன் மனைவி சத்யாவிற்கும், சுரேஷூக்கும் நட்பு ஏற்பட்டு, இதுவே கள்ளக்காதலாக மாறியது.. ஒருகட்டத்தில் வீரபத்திரனுக்கு இந்த விஷயம் தெரியவந்ததையடுத்து, அதிர்ச்சி அடைந்தார்.. சுரேஷிடம் பழகுவதை உடனடியாக நிறுத்தும்படியும் மனைவியை கண்டித்துள்ளார்.. ஆனால், சத்யா அவரது பேச்சை காதில்வாங்கி கொள்ளாமல், சுரேஷூடன் கள்ள உறவை தொடர்ந்துள்ளார்..
காட்பாடி: இதனால் விரக்தியடைந்த வீரபத்திரன், காட்பாடியிலேயே சத்யாவை விட்டு விட்டு, தன்னுடைய சொந்த ஊரான ராஜபாளையம் பகுதிக்கு திரும்பி வந்துவிட்டார்.. பிறகு, அடுத்த சில மாதங்களில் சத்யாவின் தந்தை இறந்துவிட்டார்.. தந்தையின் மரணத்துக்கு பிறகு, வீரபத்திரனிடம் சமாதானப்பேச்சு நடத்தப்பட்டது.. இனிமேல் ஒன்றாக சேர்ந்து வாழ சத்யா விருப்பம் தெரிவித்ததையடுத்து, போலீஸ் ஸ்டேஷனிலும் இது சம்பந்தமான பஞ்சாயத்து செய்யப்பட்டது.
சத்யா, போலீசார் என அனைவரும் சமாதானம் செய்த நிலையில், வீரபத்திரனும் சத்யாவுடன் இணைந்து வாழ சம்மதம் தெரிவித்தார்.. இதற்கு பிறகு சத்யாவும் சுரேஷூடனான உறவை துண்டித்துவிட்டதாக தெரிகிறது.
கொள்ளை: ஆனால், சுரேஷ் தொடர்ந்து சத்யாவுடன் போனில் தொடர்புகொள்ள முயற்சி செய்து கொண்டேயிருந்தார்.. கடைசிவரை சத்யாவுடன் அவரால் பேச முடியவில்லை.. எனவே, தன்னுடைய நண்பர்கள் ஜாபர், கர்ணன், மணிகண்டன், சசிதரன், மேகராஜ் ஆகிய 5 பேரையும் காரில் அழைத்து கொண்டு, ராஜபாளையம் பகுதியில் உள்ள சத்யாவின் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார் சுரேஷ்.. காரில் சுரேஷ் உட்கார்ந்துகொண்டு, நண்பர்களை மட்டும் சத்யாவின் வீட்டிற்கு அனுப்பி தகராறு செய்ய சொல்லி உள்ளார்.
அதன்படியே நண்பர்களும், சத்யா வீட்டிற்குள் நுழைந்து, வீரபத்திரன், சத்யாவின் அம்மா, வீரபத்திரனின் 2 பிள்ளைகளை கடுமையாக தாக்கி, அங்கிருந்த ரூமில் பூட்டிவிட்டனர். பிறகு, வீட்டிலிருந்த 15 சவரன் தங்க நகை, ஒரு லட்சம் ரொக்க பணத்துடன் காரில் தப்பி சென்றுவிட்டார்கள்.. அதாவது, சத்யாவை தவிர அனைவரையுமே அந்த கும்பல் தாக்கி சென்றுள்ளது..
விசாரணை: இதையடுத்து, வீடு புகுந்து தாக்குதல் நடத்தி, கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை கையில் எடுத்தனர். அந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆராய்ந்தனர்.
அப்போதுதான் சுரேஷ் வந்த கார் சென்ற திசையை கண்டறிந்து, காரின் ஓனர் யார் என்ற அட்ரஸை கண்டுபிடித்தனர்.. அந்த காரின் முகவரியை வைத்து, சுரேஷை போலீசார் கைது செய்தனர். ஆனால் அதற்குள், கொள்ளையடித்த 15 சவரன் நகைகளையும் நாகப்பட்டினத்தில் ஒரு நகைக்கடையில் அடகு வைத்துவிட்டனர்.. இப்போது சுரேஷின் நண்பர் ஜாபர் மட்டும் தலைமறைவாக உள்ள நிலையில், மற்ற 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications