அக்கா பொண்ணு.. அதுவும் சின்ன பொண்ணு.. கேஷூவலா டீ குடித்து அதிரவைத்த தாய்மாமன்.. திகைத்த திருப்பத்தூர்
திருப்பத்தூர்: தாய்மாமன் செய்த காரியத்தை பார்த்து, திருப்பத்தூர் நாட்றாம்பள்ளியே மிரண்டுபோய் கிடக்கிறது.. என்ன நடந்தது?
திருப்பத்தூர் மாவட்டம் பந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் பெருமாள் - ஜெயப்பிரதா தம்பதியினர். இவர்களது மகள் ஜீவிதா.. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் ஆர்ட்ஸ் காலேஜில் முதல் வருடம் படித்து வருகிறார். 18 வயதாகிறது.

ஜெயப்பிரதாவின் தம்பி பெயர் சரண்ராஜ்.. சின்னகாசிநாயக்கன் பட்டியில் வசித்து வருகிறார்.. ஆட்டோ டிரைவராகவும் போட்டோகிராபராகவும் உள்ளார். இப்போது 35 வயதாகிறது.. இவர் தன்னுடைய அக்கா ஜெயப்பிரதா மகளை காதலித்துள்ளார்.. அதாவது தன்னைவிட 17 வயது குறைந்த ஜீவிதாவை விரும்பியுள்ளார்.
தாய்மாமன்: தன் அக்காவிடம், ஜீவிதாவை பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி உள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெயப்பிரதா, திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை..
சொந்த தம்பியாக இருந்தாலும், தன் மகளைவிட, 17 வயது அதிகம் என்று நினைத்துள்ளார்.. அதுமட்டுமல்ல, ஏற்கனவே ஒரு கொலை கேஸில் சரண்ராஜூக்கு தொடர்பிருப்பதாக தெரிகிறது. அதனால், இந்த திருமணத்துக்கு சம்மதிக்க முடியாது என்று சரண்ராஜிடம் உறுதியாக சொல்லிவிட்டார் ஜெயப்பிரதா. ஆனாலும், கல்யாணம் செய்துதர வேண்டும் என்று அடிக்கடி அக்காவை தொல்லை தந்து வந்திருக்கிறார் சரண்ராஜ்.
அதுமட்டுமல்ல, ஜீவிதாவும் சரண்ராஜை விரும்பி வந்த நிலையில், திருமணத்துக்கு அம்மா மறுப்பு சொல்லிவிடவும், சரண்ராஜிடம் பேசுவதை ஜீவிதா தவிர்த்துள்ளதாக தெரிகிறது
சரண்ராஜ்: இந்நிலையில், சம்பவத்தன்று கல்லூரி விடுமுறை என்பதால், ஜீவிதா வீட்டில் இருந்துள்ளார்.. அவரது பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்தனர்... ஜீவிதா மட்டும் தனியாக இருப்பதை தெரிந்துகொண்ட சரண்ராஜ், வீட்டிற்கு சென்று, தனியாக பேச வேண்டும் என்று சொல்லி வெளியே அழைத்து வந்திருக்கிறார். அப்போது, தன்னுடைய காதலை மீண்டும் ஏற்கும்படியும், கல்யாணம் திருமணம் செய்துகொள்ளும்படியும் சரண்ராஜ் மிரட்டியிருக்கிறார்.. ஆனால், தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என ஜீவிதா கறாராக சொல்லிவிட்டார்.
இந்த ஒரு வாரமாகவே, ஜீவிதா செல்லும் இடங்களுக்கெல்லாம், பின்னாடியே சரண்ராஜும் சென்றிருக்கிறார்.. அப்போதுகூட, ஜீவிதா அவரிடம் பேசவில்லை என்பதால், சரண்ராஜுக்கு கோபம் அதிகரித்தள்ளது.
இந்த நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் ஜீவிதா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த சரண் ராஜ், ஜீவிதாவை, அங்கிருக்கும் இன்னொரு வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது மீண்டும் இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றியுள்ளது.. இறுதியில், "என்னை கல்யாணம் பண்ணிக்கவில்லையானால் நீ யாரையுமே கல்யாணமே செய்து கொள்ளக்கூடாது, செத்து ஒழி என்று சொல்லி, ஜீவிதாவின் வாயில் துணியை வைத்து அடைத்து, கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்.
அக்கா மாமா: பிறகு, தானும் தற்கொலை செய்துகொள்ள போவதாக ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டார்.. சரண்ராஜ் எழுதியிருந்த கடிதத்தில், "அன்புள்ள அக்கா, மாமா, அம்மா, அப்பாவுக்கு சரண்ராஜ் எழுதுவது... நானும் ஜீவிதாவும் 4 வருடங்களாக காதலித்தோம். திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டோம். ஆனால், முடியவில்லை என்பதால் இந்த முடிவுக்கு வந்துவிட்டோம். எங்களை மன்னித்துவிடுங்கள். இப்படிக்கு சரண் ராஜ் -ஜீவிதா" என்று கையெழுத்து போட்டிருந்தார்.
இதற்கு பிறகு போலீசார் ஜீவிதாவின் சடலத்தை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. பிறகு இது தொடர்பான வழக்கையும் பதிவு செய்து, தனிப்படையும் அமைத்து, தப்பி ஓடிய சரண்ராஜை தேடினர்..
அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி, அவர்கள் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டை ஆரம்பமானது. இறுதியில், நத்தம் பகுதியில் பதுங்கியிருந்தபோது அவரை கைது செய்தனர்.. தற்போது அவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.
ஜீவிதாவை 4 வருடமாக ஒருதலையாய் காதலித்து வந்திருக்கிறார்.. அதாவது, ஜீவிதாவுக்கு 14 வயதாகும்போதே, இந்த ஒருதலைக்காதல் முளைத்துள்ளது.
கடிதம்: நாங்கள் இருவருமே தற்கொலை செய்து கொள்ள போகிறோம் என்று கடிதம் எழுதிய சரண்ராஜ், தன்னுடைய செல்போனை அங்கேயே வீசிவிட்டு, ஜீவிதாவின் செல்போனை மட்டும் கையோடு எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.
ஆனால், கடிதத்தில் எழுதியபடி, அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அதற்கு எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லையாம்.. போலீசார் சரண்ராஜை தேடியலைந்தபோது, ஒரு டீக்கடையில், எந்தவித டென்ஷனும் இல்லாமல் உட்கார்ந்து டீ குடித்து கொண்டிருந்தாராம்...!!!
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications