வகுப்பை கட் அடித்து விட்டு ‘என்னை அறிந்தால்’ பார்க்கச் சென்ற 17 மாணவர்கள் சஸ்பெண்ட்
திருப்பூர்: திருப்பூரில், பள்ளிக்குச் செல்லாமல் அஜீத் நடித்த 'என்னை அறிந்தால்' படம் பார்க்க தியேட்டருக்குச் சென்ற பள்ளி மாணவர்கள் 17 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்தமாதம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இன்று முதல் பிளஸ் 2 செய்முறை தேர்வு துவங்குகிறது.
இந்நிலையில், நேற்று கௌதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள ‘என்னை அறிந்தால்' படம் ரிலீசானது. முதல் நாளான நேற்றே அப்படத்தைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில், திருப்பூரில் சில மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் தியேட்டருக்குச் சென்றுள்ளனர்.

தியேட்டரில் டிக்கெட் கவுண்டரில் சில பள்ளி மாணவர்கள் சீருடையுடன் நிற்பதை சாலையில் சென்ற திருப்பூர் முதன்மை கல்வி அலுவலர் முருகன் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த முருகன், அம்மாணவர்கள முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வரவழைத்தார். அம்மாணவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது.
பிடிபட்ட 17 மாணவர்களும், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிப்பவர்கள் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக திருப்பூர் முதன்மை கல்வி அலுவலர் முருகன் கூறுகையில், ''பள்ளியில், திருப்பு தேர்வு நடந்து வருகிறது; நாளை (இன்று) செய்முறை தேர்வும், அடுத்த மாதத்தில், பொதுத்தேர்வும் நடைபெற உள்ளது. இந்நிலையில், வகுப்புக்கு வராமல் பள்ளி சீருடையில், மாணவர்கள் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளனர். அவர்களது ஒழுங்கீன செயலுக்காக, சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தேர்வு நேரத்தில், மற்ற மாணவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பள்ளி நேரங்களில் வெளியில் சுற்றக் கூடாது, பள்ளி முடிந்து நேராக வீடு செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட நெறிமுறைகளை வலியுறுத்தி, சில நாட்களுக்கு முன்னர் தான் பள்ளிக் கல்வித்துறை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications