#என்னாவாம்?- திருப்பூர் தி.மு.க வேட்பாளரின் நூதனப் பிரச்சாரம்!
திருப்பூர்: தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கின்ற இந்நிலையில் கொளுத்தும் வெயிலிலும் வேட்பாளர்கள் ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்.
திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர், முன்னாள் மாநகராட்சி மேயர் க.செல்வராஜ் மக்களை எளிதில் கவரக்கூடிய வகையில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
#என்னாவாம் எனும் ஹேஷ்டேக்கில் சமூக வலைத்தளங்களில் சூரியன் தெற்கில் உதிச்சு பார்த்திருக்கீங்களா என போஸ்டர்கள் மூலம் பட்டையைக் கிளப்பி வருகிறார்.

நேரடியாக மக்களைச் சந்திக்கிற பொழுது, தான் மேயராக இருந்தபோது செய்த பலத்திட்டங்களை எடுத்துக் கூறியும், ஒண்ணுமே செய்யாத ஜெயா அரசிற்கு உங்களுடைய மதிப்பெண் என விதவிதமான நோட்டிசுகள் மூலம் மக்களை சூரியன் பக்கம் திருப்பி விட்டிருக்கிறார்.
இவர்களின் அதிரடி பிரச்சார யுக்தியால் அதிமுகவின் சார்பாக போட்டியிடும் திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் குணசேகரன் தரப்பு செய்வதறியாமல் இருக்கின்றனர். இதனால் அப்செட் ஆன எதிரணியினர் பிரச்சாரத்தையே சூரியன் இல்லாத போதுதான் நடத்துகின்றனராம்.
இருந்தாலும் பணப்பட்டுவாடாவை தடுக்க கழகத்தினரை இறக்கி விட்டிருக்கிறதாம் தி.மு.க.












Click it and Unblock the Notifications