அறநிலையத்துறை பெண் ஊழியர் தற்கொலைக்குக் காரணம் சக ஊழியர் பரப்பிய அவதூறு!
திருப்பூர் : மன உளைச்சல் காரணமாக இந்து சமய அறநிலையத்துறை பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரை இன்னொரு ஆண் ஊழியருடன் இணைத்து அவதூறு கடிதம் எழுதி அனுப்பிய ஆண் ஊழியரே காரணம் எனத் தெரிய வந்தது. இதையடுத்து அந்த ஊழியரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் லட்சுமி நகரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மனைவி திலகவதி (32). பிச்சம்பாளையம்புதூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒப்பந்த அடிப்படையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்த திலகவதி, கடந்த 14ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக திலகவதியின் உறவினர்கள் போலீசில் அளித்த புகாரில், அதிகாரிகளின் பணி நெருக்கடி மற்றும் உடன் வேலை செய்யும் பணியாளர்களின் தொந்தரவு காரணமாகவே திலகவதி தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திலகவதி குறித்து அவதூறாக அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மொட்டை கடிதம் அனுப்பப் பட்டது கண்டுபிடிக்கப் பட்டது. அந்தக் கடிதத்தில் அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் மற்றொரு நபருக்கும், திலகவதிக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கடிதம் குறித்து விசாரணை நடத்துவதற்காக திலகவதியை உயர் அதிகாரிகள் அழைத் திருந்தனர். இந்த நிலையில், தன் மீதான பொய் புகாரால் மனம் உடைந்த திலகவதி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
போலீசாரின் தொடர் விசாரணையில் கடிதத்தை எழுதியது அதே அலுவலகத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து திலகவதியை தற்கொலைக்கு தூண்டியதாக ரமேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரமேஷ், பின்னர் கோவை நடுவன் சிறையில் அடைக்கப் பட்டார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications