ஆண்ட்ராய்டு போன் வாங்கித் தராத அப்பா – தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் பெற்றோர் செல்போன் வாங்கிக்கொடுக்காத விரக்தியில்கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை சேர்ந்த வெங்கடாசலத்தின் மகள் நந்தினி 18 வயதானவர். இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார்.
நந்தினி ரொம்ப நாட்களாக தனது பெற்றோரிடம் புதிய ஆண்ட்ராய்டு செல்போன் மற்றும் சுடிதார் கேட்டுள்ளார்.
ஆனால் பெற்றோர் செல்போன் வங்கி கொடுக்காமல் காலம் கடத்தி வந்தனர். இதனால் விரக்தியடைந்த நந்தினி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications