தமிழகத்தில் போட்டியில்லை... அ.தி.மு.க.வை ஆதரித்து பணியாற்றுங்கள்: மம்தா அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் போட்டியிடப் போவதில்லை எனவே அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்து பணியாற்றுங்கள் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளாராம்.
இது தொடர்பாக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஏ.சபீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்து பணியாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.
அதன்படி, நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு, மாநில-மாவட்ட, ஒன்றிய கமிட்டியின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் அயராது உழைத்து 40 தொகுதிகளையும் வென்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு சமர்பிக்க அயராது பாடுபட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது" என இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.