சட்டசபையின் 2வது கூட்டத்தொடர்….13ஆம் தேதி பட்ஜெட் தாக்கலுடன் தொடக்கம்
சென்னை: தமிழக சட்டசபையின் இரண்டாவது கூட்டத்தொடர் வரும் 13ஆம் தேதி துவங்குகிறது.அன்றைய தினம் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார்.
புதிய ஆண்டிற்கான முதலாவது தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் 30ஆம் தேதி ஆளூநர் உரையுடன் துவங்கியது.
அதன் பின்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதில் எம்.எல்.ஏக்கள் விவாதித்தனர்.பின்னர் அக்கருத்துகளுக்கு 3ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்து பேசினார்.
இதன் தொடர்ச்சியாக சட்டசபையின் 2-வது கூட்டத் தொடர் வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. அன்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதில் அரசின் புதிய திட்டங்கள் இடம்பெறும்.
முன்னதாக 13ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபை கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்குப் பதிலாக 11 மணிக்கு கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘'13ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை காலை 10 மணிக்கு பதிலாக முற்பகல் 11 மணிக்கு கூடும் என்று பேரவை தலைவர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 26(2)-ன் கீழ் ஆணையிட்டுள்ளார்.. அச்சமயம் 2014-2015ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்''என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications