ஜெ. மீண்டும் முதல்வராவார்- ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை
-ஜெ. மீண்டும் முதல்வராவார்- ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை
-சென்னை மாவட்டம் -13%; திருவாரூர்- 5% வாக்குப் பதிவு
-தமிழகத்தில் காலை 9 மணி வரை 19 சதவீத வாக்குப் பதிவு
-புதுவையில் காலை 9 மணிவரை 10.34% வாக்குகள் பதிவு
-கோவை மாவட்டத்தில் 5.7% வாக்குகள் பதிவு
-கடலூர் மாவட்டத்தில் 15%; ராமநாதபுரம் மாவட்டத்தில் 3% வாக்குகள் பதிவு
-தமிழகத்தில் காலை 9 மணிநிலவரப்படி 18.3% வாக்குகள் பதிவு

-ராமநாதபுரம் மாவட்டத்தில் காலை 9 மணி நிலவர்ப்படி 3% வாக்கு
-சென்னை அண்ணாநகரில் இ.கம்யூ மூத்த தலைவர் தா. பாண்டியன் வாக்களித்தார்
-தமிழகத்தில் அமைதியாக தேர்தல் நடத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: தா. பாண்டியன்
-மக்களுக்கு பல தலைவர்கள் பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளனர்- தா. பாண்டியன்
-திருவண்ணாமலை சேப்பாபட்டில் திமுக- அதிமுகவினர் இடையே மோதல்- 3 பேர் மண்டை உடைந்தது
-தமிழகம், புதுவை, கேரளா வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்
-கிருஷ்ணகிரி சிந்தகம்பள்ளியில் லோக்சபா துணைசபாநாயகர் தம்பித்துரை வாக்களித்தார்
-ராமநாதபுரம், நாகையில் மின்சாரம் இல்லாததால் மெழுகுவர்த்தி ஒளியில் வாக்குப் பதிவு
-கூடலூர், பந்தலூரிலும் மின்சாரம் இல்லாத நிலையில் வாக்குப் பதிவு
-ஜெ. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்- மு.க.ஸ்டாலின்
-234 தொகுதிகளிலும் திமுக வெல்லும்- மு.க.ஸ்டாலின்

-வேட்பாளர் பற்றி முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்- நடிகர் பார்த்திபன்
-வேட்பாளர் பற்றி திருப்தி இல்லாமல் போனால் 'நோட்டாவுக்கு' ஓட்டு போடுங்கள்- நடிகர் பார்த்திபன்
-நிறைய இளைஞர்கள் 'நோட்டாவுக்கு' போட தயாராக உள்ளனர்- நடிகர் பார்த்திபன்
-நோட்டாவுக்கு அடுத்த தேர்தலில் பவர் கிடைக்கும்- நடிகர் பார்திபன்
-சென்னை தேனாம்பேட்டையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
-மனைவி துர்கா, மகன் உதயநிதியுடன் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
-தோல்வி பயத்தால் அதிமுக பணம்பட்டுவாடா செய்தது- குஷ்பு பேட்டி
-பறிமுதல் செய்யப்பட்ட 99% பணம் அதிமுகவினருடையது- நடிகை குஷ்பு
-அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்- நடிகை குஷ்பு
-சென்னை மந்தைவெளியில் வாக்களித்த பின்னர் குஷ்பு பேட்டி
-திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் எஸ்.ஐ.ஈ.டி கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்
-மனைவி துர்கா உடன் வாக்களித்தார் மு.க.ஸ்டாலின்
-சென்னை மந்தவெளியில் நடிகை குஷ்பு வாக்களித்தார்
-கோவை வடக்கு தொகுதியில் 147-வது வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு நிறுத்தம்
-வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் பதிவாகவில்லை என்பதால் வாக்குப் பதிவு நிறுத்தம்
-மாற்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் தற்போது வாக்குப் பதிவு மீண்டும் தொடங்கியது
-சென்னை அடையாறில் முன்னாள் காங். கமிட்டி தலைவர் தங்கபாலு வாக்களித்தார்
-சென்னை தேனாம்பேட்டையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாக்களிக்கிறார்
- சென்னை சாலிகிராமத்தில் நடிகர் விவேக் வாக்களித்தார்
-பண்ருட்டி மேல்குமாரமங்கலத்தில் அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்களித்தார்
-திண்டுக்கல் வேடசந்தூர் 166; தூத்துக்குடி 245-வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது
-சென்னை மாநகர போலீஸ் ஆணையர் அசுதோஷ் சுக்லா முகப்பேரில் வாக்களித்தார்
-திருத்துறைப்பூண்டி அருகே வேலூரில் இ.கம்யூனிஸ்ட் செயலர் முத்தரசன் வாக்களித்தார்
-ஈரோட்டில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் வாக்களித்தார்
-அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பணப் பட்டுவாடா செய்துள்ளது என இளங்கோவன் புகார்
{video1}
-நாமக்கல் சின்னாகவுண்டம்பாளையத்திலும் வாக்கு எந்திரம் பழுது
-மதுரையில் கொட்டும் மழையுடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது
-திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை பெய்வதால் வாக்குப்பதிவு மந்தம்
-சென்னை ஆதம்பாக்கத்தில் மார்க்சிஸ்ட் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் வாக்களித்தார்
-பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்- ஜி.ராமகிருஷ்ணன்
-அரவக்குறிச்சி, தஞ்சையில் மே 19-க்கு முன்னரே தேர்தல் நடத்த வேண்டும்- ஜி.ராமகிருஷ்ணன்
-நடிகர் கமல்ஹாசன், மகள் அக்ஷரா, நடிகை கெளதமியுடன் வாக்களித்தார்
-ராசிபுரம் கூனவேனல்பட்டி வாக்குச் சாவடியிலும் வாக்கு எந்திரம் பழுது
-ஈரோடு மணியக்காரன்புதூரிலும் வாக்குப் பதிவு எந்திரம் பழுது
-தேர்தல் ஆணையத்தால் பணப்பட்டுவாடா ஓரளவு தடுக்கப்பட்டுள்ளது- கருணாநிதி
-திருவாரூர் தொகுதி புதூரில் வாக்கு எந்திரம் பழுதால் வாக்குப் பதிவு தொடங்கவில்லை
சென்னை தேனாம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடிகர் கமல்ஹாசன் வாக்களிப்பு
-திருவள்ளூர்: திருத்தணி மிட்டாகண்டிகை கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்
-அடிப்படை வசதிகள் செய்துதராததைக் கண்டித்து மிட்டா கண்டிகை மக்கள் தேர்தல் புறக்கணிப்பு
-சென்னை ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் நடிகர் கமல்ஹாசனும் வாக்களித்தார்
-பிற்பகல் 3.30 மணிக்கு மேல் ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் வாக்குப் பதிவு விவரம் அறிவிக்கப்படும்
-காஞ்சி திருக்கால்மேட்டில் வாக்குச் சாவடியில் வாக்கு எந்திரம் பழுது
-விருதாசலம் விஜயமாநகரில் வாக்கு எந்திரம் பழுது
-நாமக்கல் ஆலம்பாளையத்தில் எந்திரம் பழுது
-ஆரணியில் எந்திரம் பழுது
-ஊத்தரங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் எந்திரம் பழுது
-சங்கரன்கோவில் தொகுதியிலும் ஒரு வாக்குச் சாவடியில் எந்திரம் பழுது
-கடலூர் கந்தசாமிநாயுடு கல்லூரியில் வாக்கு எந்திரம் பழுது
-வாக்கு எந்திரங்கள் பழுதான இடங்களில் மாற்று எந்திரங்கள் பொறுத்தம்
-வாக்கு எந்திரங்கள் பழுதான இடங்களில் வாக்குப் பதிவு துவங்குவதில் தாமதம்
-சென்னை சாலிகிராமம் சேவா சமாஜம் பள்ளியில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வாக்களித்தார்
-சட்டசபை தேர்தலில் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது- சீமான் பேட்டி
-பணப்பட்டுவாடாவை தடுக்காத தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்துவிட்டது- ப.சிதம்பரம்
-திமுகவின் வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது- கருணாநிதி
-தேர்தல் ஆணையம் ஒருசில இடங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளது- கருணாநிதி
-திண்டுக்கல் பேகம்பூரில் 2 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுது
-தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் விறுவிறுப்புடன் வாக்குப் பதிவு
-ஓசூர், காஞ்சிபுரம், கோவையிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுது
-திண்டுக்கல், கடலூர், பொள்ளாச்சியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுது
-சென்னை கோபாலபுரம் சாரதா நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் கருணாநிதி வாக்களித்தார்
-ஆம்பூர், ஊத்தங்கரையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுது- வாக்காளர்கள் காத்திருப்பு
-சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி வாக்களித்தார்
-சென்னை கோபாலபுரம் வாக்குச் சாவடியில் திமுக தலைவர் கருணாநிதி வாக்களிக்க வருகை
-போயஸ் கார்டன் அருகே உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த ரஜினிகாந்த்
-ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடிக்கு காலையிலேயே வந்த ரஜினி
-வாக்குப்பதிவு துவங்கிய கையோடு வாக்களித்த ரஜினி
-வாக்களிக்க வருவதாக மேலாளர் மூலம் சொல்லி அனுப்பியுள்ளார் கமல்
-2 மணிநேரத்துக்கு ஒருமுறை வாக்குப் பதிவு சதவீதம் அறிவிக்கப்படும்- லக்கானி
-சென்னை அரும்பாக்கத்தில் மனைவியுடன் வாக்களித்தார் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி
-சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் நடிகர் ரஜினி வாக்களித்தார்
-சென்னை விருகம்பாக்கத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தார்
அடையாறு வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வாக்களித்தனர் அஜீத், ஷாலினி
சென்னை அரும்பாக்கத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி வாக்களித்தார்
சென்னை திருவான்மியூர் வாக்குச் சாவடியில் நடிகர் அஜித், நடிகை ஷாலினி வாக்களித்தனர்












Click it and Unblock the Notifications