மாணவர்கள் அடித்த அவமானம் தாங்க முடியாமல் தூக்கில் தொங்கிய ஆசிரியர்
நெல்லை: நெல்லையில் மாணவர்கள் தாக்கியதால் அவமானத்தில் பாலிடெக் கல்லூரியில் பணியாற்றிய ஆசிரியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சுப்பிரமணியன். அவர் தான் கொடுத்த வகுப்புப் பாடத்தை முடிக்காத மற்றும் சரியாக தேர்வு எழுதாத 20 மாணவர்களை திட்டியுள்ளார்.
இதையடுத்து திட்டு வாங்கிய மாணவர்கள் குடிபோதையில் சுப்பிரமணியனின் வீட்டுக்கு சென்று அவரை காரில் அழைத்துச் சென்று அவரை அடித்து நொறுக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த சுப்பிரமணியன் வீட்டுக்கு வந்து தனக்கு நடந்த அவமானத்தை உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் செல்வம், பிரதீப், பிள்ளைகுமரன் உள்ளிட்ட 5 மாணவர்களை கைது செய்துள்ளனர். மற்ற மாணவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மாணவர்கள் சுப்பிரமணியத்தை தவிர கல்லூரியில் பணிபுரியும் டிரைவர் மற்றும் அவரது மனைவியையும் தாக்கியுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.