பரபரப்பான அரசியல் சூழலில் அமைச்சரவை கூட்டம்… நீட், விவசாயிகள் பிரச்சனை குறித்து முக்கிய முடிவு
பரபரப்பான அரசியல் சூழலில் அமைச்சரவை கூட்டம் கூடியது. அதில், குடிநீர், வறட்சி, விவசாயிகள் பிரச்சனை குறித்து முக்கிய விவாதம் நடைபெற்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
சென்னை: சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தை நடத்துவதற்காக சட்டசபையை கூட்டுவதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, அதிமுக இணைப்பு, அமைச்சர் வீட்டில் ஐடி ரெய்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் இன்று இந்தக் கூட்டம் நடைபெற்றது.

அமைச்சரவைக் கூட்டத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தை நடத்துவதற்காக சட்டசபையை கூட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதே நேரத்தில் விவசாயிகளின் பிரச்சினை, தமிழகம் முழுவதும் எழுந்துள்ள மின்சார தடை, நிலங்கள் பத்திர பதிவு, வறட்சி, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில், நீட் தேர்வு குறித்தும், விவசாயிகள் பிரச்சனை குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றப் பின்னர் அவரது தலைமையிலான 3வது அமைச்சரவை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications