For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி மேலாண்மை வாரியம் கோரி திருச்சியில் மே 8ல் விவசாயிகள் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியம் கோரி திருச்சியில் மே 8ல் விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தவுள்ளனர்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    4 டிஎம்சி நீரை தர கர்நாடகா மறுப்பு- வீடியோ

    திருச்சி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இனியும் தாமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி வருகிற மே 8ம் தேதி திருச்சியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கில், காவிரி நீர் பங்கீட்டிற்கான வரைவு அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டுள்ளது.

    TN Farmers Hunger Strike Protest on May 8th

    மத்திய அமைச்சர்களும், பிரதமரும் கர்நாடக சட்டசபைத் தேர்தலையொட்டி பிரச்சாரத்தில் இருப்பதால், வரைவு அறிக்கை தயாரித்து ஒப்புதல் பெற முடியவில்லை என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்துள்ளது.

    இந்நிலையில் தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 4 டி.எம்.சி. தண்ணீர் தர கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், வழக்கு விசாரணை மே 8ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

    இதுதொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தாமதப்படுத்தும் நடவடிக்கை என்றும், உடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக்கோரியும் தமிழக விவசாயிகள் வருகிற மே 8ம் தேதி திருச்சியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

    English summary
    TN Farmers Hunger Strike Protest on May 8th. Tamilnadu Farmers association planned for hunger strike for cauvery management board issue at Trichy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X