காவிரி மேலாண்மை வாரியம் கோரி திருச்சியில் மே 8ல் விவசாயிகள் உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் கோரி திருச்சியில் மே 8ல் விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தவுள்ளனர்.
Recommended Video
திருச்சி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இனியும் தாமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி வருகிற மே 8ம் தேதி திருச்சியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கில், காவிரி நீர் பங்கீட்டிற்கான வரைவு அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டுள்ளது.
மத்திய அமைச்சர்களும், பிரதமரும் கர்நாடக சட்டசபைத் தேர்தலையொட்டி பிரச்சாரத்தில் இருப்பதால், வரைவு அறிக்கை தயாரித்து ஒப்புதல் பெற முடியவில்லை என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 4 டி.எம்.சி. தண்ணீர் தர கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், வழக்கு விசாரணை மே 8ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
இதுதொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தாமதப்படுத்தும் நடவடிக்கை என்றும், உடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக்கோரியும் தமிழக விவசாயிகள் வருகிற மே 8ம் தேதி திருச்சியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.