ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் உணவுத் துறை அமைச்சர் காமராஜ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மீது சென்னை அமர்வு நீதிமன்றத்தில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் சார்பில் அவதூறு வழக்கு ஒன்று தொடரப் பட்டுள்ளது.
கடந்த 17ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் பருப்பு கொள்முதலில் ரூ. 370 கோடி முறைகேடு நடந்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

ராமதாஸின் இந்த அறிக்கை தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் சார்பில் அரசு வக்கீல் ஜெகன் சென்னை அமர்வு நிதிமன்றத்தில் இன்று மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications