தமிழகத்தில் பந்த்: ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வர போக்குவரத்து துறை உத்தரவு
தமிழகத்தில் இன்று வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுவதால் ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வர வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் இன்று வேலைநிறுத்த போராட்டத்துக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் விடுப்பில் சென்ற பணியாளர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவை பிறப்பித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் திமுக இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி இன்று பந்த் காலை 6 மணி முதல் தொடங்கியது. இதற்கு பெரும்பாலான கடைகள் ஒத்துழைப்பு நல்கியுள்ளன. இதற்கு போக்குவரத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.
தமிழகத்தில் பேருந்துகள் மிக குறைவாகவே இயக்கப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவாக வேலைநிறுத்தம் செய்ய போவதாக சில தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வர போக்குவரத்துத்துறை உத்தரவுவிட்டுள்ளது.

அப்படி மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுப்பில் சென்ற பணியாளர்களும் இன்று கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications