ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு ‘இருக்கை’... அரசு ஆதரிக்க கருணாநிதி கோரிக்கை
சென்னை: உலகப்புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை ஏற்படுத்துதல், அலகாபாத்தில் திருவள்ளுவர் சிலை அமைத்தல் உள்ளிட்ட தமிழ் மொழியின் மேன்மையைப் பரப்பிடும் சிறப்பான செயல்களில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலகப் புகழ் பெற்ற, ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில், மூன்று கோடி மக்கள் பேசும் உக்ரேனிய மொழிக்கு, இரண்டு இருக்கைகள் உள்ளன; 15 லட்சம் மக்கள் பேசக்கூடிய, 'செல்டிக்' மொழிக்கும் இருக்கைகள் உள்ளன. அதேபோல, 'ஹீப்ரு, சமஸ்கிருதம்' உட்பட, பல மொழிகளுக்கும், இருக்கைகள் இருக்கின்றன.

ஆனால், எட்டு கோடி மக்கள் பேசும் செம்மொழியான தமிழ் மொழிக்கு, அங்கே இருக்கை இல்லை. தற்போது, தமிழ் மொழிக்கு இருக்கை ஏற்படுத்துவதற்கான முயற்சியில், அமெரிக்க வாழ் தமிழர்கள் சிலர் இறங்கி, அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுள்ளனர்.அதேபோல, உ.பி., மாநிலம் அலகாபாத்தில், திருவள்ளுவர் சிலை அமைக்க, சிலர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில், தமிழ் இருக்கை அமைய எடுக்கப்பட்ட முயற்சி; உ.பி.,யில், திருவள்ளுவர் சிலை அமைக்க மேற்கொண்ட முயற்சி, இரண்டையும் பாராட்டுவதோடு, இதை தமிழக அரசு ஊக்குவித்து, உரிய முறையில் ஆதரவு அளிக்க வேண்டும்.
ஐந்தாண்டு ஆட்சி முடிய இருக்கும் நேரத்தில், முதலீட்டாளர் மாநாட்டை நடத்துவதற்காக, 100 கோடி ரூபாய் செலவிட முன்வரும் தமிழக அரசு, தமிழின் மேன்மையை பரப்பிடும், இத்தகைய சிறப்பான செயல்களிலும், ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications