ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகை- பெரும்பான்மையை எடப்பாடியார் நிரூபிக்க உத்தரவிடுகிறார்?
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார்.
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார். அப்போது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிடலாம் என கூறப்படுகிறது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. 19 எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் ஏற்கனவே கடிதம் அளித்துள்ளனர்.

பெரும்பான்மை இழப்பு
அதேநேரத்தில் தாங்கள் அதிமுகவிலேயே தொடருகிறோம்; வேறு ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

கட்சிகள் நெருக்கடி
மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு
அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் உத்தரவிடலாம் என கூறப்படுகிறது. பெரும்பான்மையை எடப்பாடி பழனிச்சாமி நிரூபிக்காவிட்டால் சட்டசபையை ஆளுநர் முடக்கி வைக்கவும் வாய்ப்பு உள்ளது.

எத்தனை எம்.எல்.ஏக்கள்?
தற்போதைய நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 115 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் உள்ளது. பெரும்பான்மைக்கு 117 எம்.எல்.ஏக்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications