Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலீஸ் வேட்டையாடிய நடுக்குப்பத்தில் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு- திங்களன்று நிவாரணம் அறிவிப்பு!

சென்னை நடுக்குப்பம் மீனவர் குடியிருப்பை அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். சட்டசபையில் திங்களன்று மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டு புரட்சிக்கு பாதுகாப்பாக இருந்ததால் போலீசாரால் வேட்டையாடப்பட்ட சென்னை நடுக்குப்பம் மீனவர் குடியிருப்பை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று பார்வையிட்டார். போலீஸ் தடியடியில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நிவாரணம் திங்கள்கிழமையன்று சட்டசபையில் அறிவிக்கப்படும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஜல்லிக்கட்டுப் புரட்சிக்கு பாதுகாப்பும் உணவும் வழங்கியவர்கள் மீனவர்கள். இதனாலேயே கடும் ஆத்திரம் அடைந்த போலீசார் மீனவர்கள் மீது கொடூரமான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டனர். ஆட்டோக்கள், மீன் சந்தை உள்ளிட்டவற்றை தீக்கிரையாக்கினர். குறிப்பாக நடுக்குப்பம் பகுதியில் நரவேட்டையாடியது போலீஸ்.

TN Govt to announce compensation, says Minister Jayakumar

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் அரசியல் கட்சித் தலைவர்கள். இந்த நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று நடுக்குப்பம் மீனவர் குடியிருப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

போலீசார் பாஸ்பரஸ் தூவி தீக்கிரையாக்கிய மீனவர் சந்தையையும் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், போலீஸ் தடியடியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நிவாரணம் திங்கள்கிழமையன்று சட்டசபையில் அறிவிக்கப்படும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+