போலீஸ் வேட்டையாடிய நடுக்குப்பத்தில் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு- திங்களன்று நிவாரணம் அறிவிப்பு!
சென்னை நடுக்குப்பம் மீனவர் குடியிருப்பை அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். சட்டசபையில் திங்களன்று மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை: ஜல்லிக்கட்டு புரட்சிக்கு பாதுகாப்பாக இருந்ததால் போலீசாரால் வேட்டையாடப்பட்ட சென்னை நடுக்குப்பம் மீனவர் குடியிருப்பை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று பார்வையிட்டார். போலீஸ் தடியடியில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நிவாரணம் திங்கள்கிழமையன்று சட்டசபையில் அறிவிக்கப்படும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஜல்லிக்கட்டுப் புரட்சிக்கு பாதுகாப்பும் உணவும் வழங்கியவர்கள் மீனவர்கள். இதனாலேயே கடும் ஆத்திரம் அடைந்த போலீசார் மீனவர்கள் மீது கொடூரமான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டனர். ஆட்டோக்கள், மீன் சந்தை உள்ளிட்டவற்றை தீக்கிரையாக்கினர். குறிப்பாக நடுக்குப்பம் பகுதியில் நரவேட்டையாடியது போலீஸ்.

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் அரசியல் கட்சித் தலைவர்கள். இந்த நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று நடுக்குப்பம் மீனவர் குடியிருப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
போலீசார் பாஸ்பரஸ் தூவி தீக்கிரையாக்கிய மீனவர் சந்தையையும் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், போலீஸ் தடியடியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நிவாரணம் திங்கள்கிழமையன்று சட்டசபையில் அறிவிக்கப்படும் என்றார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications