தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட அரசு திடீர் உத்தரவு
நெல்லை: தமிழகம் முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் பார்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் மதுபான விற்பனையை தமிழக அரசே 2003ம் ஆண்டு முதல் ஏற்று நடத்தி வருகிறது. இதற்காக டாஸ்மாக் நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாநிலம் 6500 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 2005ல் டாஸ்மாக் மூலம் அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்த நிலையில் தற்போது ரூ.25 ஆயிரம் கோடி வரை வருமானம் அதிகரித்துள்ளது.

இந்த நிதி மூலம் தான் அரசின் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்தி கோரி நாகர்கோவிலில் காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார். இதையடுத்து மதுவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்தது. சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்தினால்தான் தமிழகத்திலும் அமுல்படுத்த முடியும் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பதாக உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அளித்தது. இதையடுத்து முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 250 மீட்டர் வரை உள்ள டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 500 கடைகள் மூடப்படும். இது தேர்தலை கருத்தில் கொண்டே பிறப்பிக்கப்பட்ட உத்தரவாக பலர் கருதுவதாக கூறப்படுகிறது.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications