பால் விலை உயர்வு... எதிர்கட்சிகளின் போராட்டம்... மக்களின் 'பல்ஸ்' பார்க்கும் அரசு
சென்னை: எதிர்க்கட்சிகளின் கடுமையான கண்டனம் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு பிறகும், ஆவின் பால் விலையை அரசு குறைக்கவில்லை. கடந்த ஒரு வாரகாலமாக பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து மின்கட்டணத்தையும் உயர்த்த அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் மனநிலையை அறியவும் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது. இதனையடுத்து 2012ஆம் ஆண்டு ஆவின் பால், லிட்டருக்கு 6.50 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது. மின்கட்டணம், பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட்டது.

இரண்டு ஆண்டுகளில்
இரண்டு ஆண்டுகளில் ஆவின் பால் லிட்டருக்கு 10 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற போது ஒரு விட்டர் பால் 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 80 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.

மக்கள் பாதிப்பு
ஒரு லிட்டர் பாலின் விலை,சில்லரை விலையில் 37 முதல், 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வினால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆவின் பால் விலை உயர்வை அடுத்து தனியார் பாலும் லிட்டருக்கு ரூ.4 உயர்ந்துள்ளது. இதனால் கடைகளில் டீ, காபி விலையும் உயர்ந்துள்ளது.

அரசு சமாதானம்
பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக அரசு கூறினாலும் இருப்பதாக, முதல்வர் பன்னீர்செல்வம் விளக்கம் எதிர்க்கட்சிகள், தமிழகம் முழுவதும் தினந்தோறும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஒன்றிணைந்த எதிர்கட்சிகள்
தேமுதிக, திமுக, மதிமுக, பாமக, விசிக என அனைத்துக் கட்சியினரும் ஆர்பாட்டம் நடத்திவிட்டனர். அரசுக்கு எதிராக கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளன எதிர்கட்சிகள். இந்த போராட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

அசராத அரசு
லோக்சபா தேர்தல் தோல்வி மூலம், துவண்டிருந்த, எதிர்க்கட்சிகள் அனைத்தும், இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் எழுச்சி கண்டன. ஆனால், இத்தனைக்கு பின்னும், அரசு தரப்பில் அசரவில்லை. பால் விலை உயர்வை அரசு திரும்ப பெறவில்லை.
தனியாரும், பால் விலையை லிட்டருக்கு நான்கு முதல், ஆறு ரூபாய் வரை உயர்தியுள்ளதால், , அரசுக்கு எதிராக அதிருப்தி அதிகரிக்கும் என ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் அதிருப்தியை கருத்தில் கொண்டு, மக்களின் மனநிலையை அறிய அரசு, திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக, ரகசிய கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வருவதாக, சொல்கின்றனர்.

மின் கட்டண உயர்வு
பால் விலை உயர்வையே சமாளிக்க முடியாமல் தடுமாறும் அரசு, மின் கட்டண உயர்வை எப்படி வெளியிடுவது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்களாம். எனினும் மின் கட்டண உயர்வினை இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்க அரசு முடிவு செய்து விட்டதாக கூறப்படுவதால் அடுத்த போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர் எதிர்கட்சியினர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications