நீர் ஆவியாகாமல் இருக்க இங்கே தெர்மாகோல்... குஜராத்தில் 'வேற லெவல்'
தமிழகத்தில் வைகை அணையில் நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மகோல் பயன்படுத்தும் நிலையில், குஜராத் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது.
சென்னை : கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் வைகை அணையின் நீர் வெப்பமாதலை தடுக்க தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததை சமூக வலைதளங்கள் விமர்சித்து வருகின்றன.
தேனி மாவட்டம் வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் செலவில் தெர்மகோல்களைக் கொண்டு மூட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் முதற்கட்டமாக 200 சதுர அடிக்கு வைகை அணையில் உள்ள நீர் மேல் அமைச்ச்ர செல்லூர் ராஜு தலைமையில் நேற்று தெர்மாகோல் போடப்பட்டது. ஆனால் மூடப்பட்ட அனைத்து தெர்மா கோல்களும் போடப்பட்ட சில நிமிடங்களிலேயே காற்றின் வேகத்தால் கரை ஒதுங்கியது. இதனால் அரசின் திட்டம் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.

இங்கே தெர்மகோல் கொண்டு மூடும் பணியை மேற்கொள்ளும் இதே வேளையில் குஜராத்தில் கால்வாயை தொழில்நுட்ப முறையில் மூடி காரியம் கனக்கச்சிதமாக முடிக்கப்பட்டுள்ளது.
அஹமதாபாத்தின் மேஹ்சனா கிராமத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கால்வாயின் நீர் ஆவியதை தடுக்க கால்வாய்க்கு மேல் சோலார் பேனல்கள் போடப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முறையாக செய்யப்பட்ட இந்த முயற்சி வெற்றியடைந்துள்ளது.
சர்தார் சரோவர் திட்டத்தின் ஒரு அங்கமான சனந்த் கிளை கால்வாயில் 750 கிலோ மீட்டர் தொலைவில் செய்யப்பட்ட சோலார் திட்டம் மக்களுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது. 2012ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 1.6 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுவதோடு, 90 லட்சம் லிட்டர் குடிநீர் நீராவியாவதும் தடுக்கப்படுகிறது. இந்த செய்தியை வைத்து சமூக ஊடகங்களில் கருத்து மேசேஜ்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications