சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சால் சர்ச்சை
பெண் நிருபர் கேட்ட கேள்விக்கு சர்ச்சைக்குரிய பதிலளித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : பெண் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு சர்ச்சைக்குரிய பதிலளித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். அரசியல் தொடர்பான கேள்வியை தவிர்ப்பதற்காகவே தான் அவ்வாறு பேசியதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மார்ச் 19 முதல் 5 நாட்களுக்கு சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சட்டசபையில் சிறப்புத் தீர்மானமும் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாலை தொடங்கி இரவு வரை எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தை முடித்து வெளியே வந்த சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரிடம் என்னென்ன விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கேள்வி எழுப்பப்பட்டது. தனியார் தொலைக்காட்சியின் பெண் நிருபரின் கேள்விக்கு சம்பந்தமில்லாமல் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
பெண் நிருபர் குறித்து அமைச்சர் தெரிவித்த கருத்து சக பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது சர்ச்சை பதில் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார். அரசியல் தொடர்பான கேள்விகளை தவிர்க்கவே தான் அவ்வாறு கூறியதாகவும், இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அனைத்து பத்திரிக்கையாளர்களையும் தான் மதிப்பதாகவும், அனைவருமே தனது சகோதர, சகோதரிகள் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட பெண் நிருபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் வருத்தத்தை தெரிவித்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம். துறை சார்ந்த கேள்விகளை நான் எப்போதுமே தவிர்த்ததில்லை, ஆனால் அரசியல் சார்ந்த கேள்வி என்பதால் அதனை தவிர்ப்பதற்காகவே அந்த பதிலை அளித்ததாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications