தமிழகமும் கர்நாடகமும் எங்களுக்கு இரு கண்கள்.. சொல்வது நிதின் கட்கரி
தமிழகமும் கர்நாடகமும் எங்களுக்கு இரு கண்கள் போன்றது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகமும் கர்நாடகமும் எங்களுக்கு இரு கண்கள் போன்றது. எனவே, காவிரி விவகாரத்தில் இரு மாநில நலன்களும் பாதுகாக்கும் படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி சந்தித்தார். அப்போது தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில், உச்சநீதிமன்றம் வழங்கிய கால அவகாசத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழக முதல்வர் முன்வைத்தார்.
மேலும், தமிழகத்தில் புதிதாக அமைக்கப்படும் சாலைகளின் திட்டப்பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்கு மத்தியமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். அதற்குப்பிறகு, சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சோதனை ஓட்டமாக சரக்குக் கப்பல் போக்குவரத்து கடந்த சனிக்கிழமை தொடங்கி உள்ளதாகத் தெரிவித்தார்.
பிறகு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகமும் கர்நாடகமும் மத்திய அரசின் கண்கள் என்றும், இரு மாநில நலன்களும் பாதுகாக்கப்படும் வகையில் காவிரி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications