அரசுப் பேருந்துகளில் செல்ல நவீன "ஸ்மார்ட் ட்ராவல் கார்டு"... சென்னையில் விரைவில் அறிமுகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை : அரசுப் பேருந்துகளில் பயண டிக்கெட்டுக்கு அட்டை மூலம் பணம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை தொடர்பான கொள்கை விளக்க குறிப்பில் தமிழக அரசு இத்தகவலை தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட தொகை செலுத்தி வாங்கும் அட்டையை அரசுப் பேருந்துகளில் டிக்கெட் வாங்க பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் வாங்கும் போதெல்லாம் அட்டையில் இருந்து பணம் கழிக்கப்படும். தேவைக்கேற்ப பயண அட்டையை பணம் செலுத்தி டாப் அப் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து பயண அட்டையை மெட்ரோ ரயிலிலும் பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அரசுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நவீன பயண அட்டை திட்டம் ரூ.3.50 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications