இந்த மழைக்காலத்தில் ஒரு கவுன்சிலரும் இருக்க மாட்டார்..!
சென்னை: தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் ஆயுள் காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து தனி அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் வரவுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 1 லட்சத்து 31 ஆயிரத்து 794 உள்ளாட்சி உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. ஆனால் தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் உரிய காலத்திற்குள் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து தமிழக அரசு சமீபத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட்டு அரசாணை பிறப்பித்தது. இந்த நிலையில் நாளையுடன் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைகிறது.
இதனால் 12 மாநகராட்சிகளின் மேயர்கள் உள்பட அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலமும் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. அதன் பின்னர் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் ஆணையர்களும், பேரூராட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களும் பொறுப்புகளை தம் வசம் கொண்டு வருவர். தேர்தல் நடத்தப்படும் வரை இவர்களே உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பார்கள்.
தமிழகத்தில் மழைக்காலம் நெருங்கி வருகிறது. கடந்த ஆண்டு மிகப் பெரிய வெள்ளத்தை சென்னை உள்ளிட்ட பகுதிகள் சந்தித்தன. அப்போது உள்ளாட்சிப் பிரதிகள் பொறுப்பில் இருந்தும் கூட மக்களுக்கு சரிவர உதவவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தற்போது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் மழைக்காலம் வருவதால் மக்களிடையே பெரும் கவலையும் அச்சமும் தோன்றியுள்ளது.
இந்த மழைக்காலத்தில் அதிகாரிகளே முழுக்க முழுக்கப் பொறுப்பில் இருக்கும் நிலையும் உருவாகியுள்ளது. முதல்வரும் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருப்பதும் மக்களிடையே கவலையை இரட்டிப்பாக்கியுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications