இந்த மழைக்காலத்தில் ஒரு கவுன்சிலரும் இருக்க மாட்டார்..!
சென்னை: தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் ஆயுள் காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து தனி அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் வரவுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 1 லட்சத்து 31 ஆயிரத்து 794 உள்ளாட்சி உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. ஆனால் தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் உரிய காலத்திற்குள் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து தமிழக அரசு சமீபத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட்டு அரசாணை பிறப்பித்தது. இந்த நிலையில் நாளையுடன் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைகிறது.
இதனால் 12 மாநகராட்சிகளின் மேயர்கள் உள்பட அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலமும் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. அதன் பின்னர் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் ஆணையர்களும், பேரூராட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களும் பொறுப்புகளை தம் வசம் கொண்டு வருவர். தேர்தல் நடத்தப்படும் வரை இவர்களே உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பார்கள்.
தமிழகத்தில் மழைக்காலம் நெருங்கி வருகிறது. கடந்த ஆண்டு மிகப் பெரிய வெள்ளத்தை சென்னை உள்ளிட்ட பகுதிகள் சந்தித்தன. அப்போது உள்ளாட்சிப் பிரதிகள் பொறுப்பில் இருந்தும் கூட மக்களுக்கு சரிவர உதவவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தற்போது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் மழைக்காலம் வருவதால் மக்களிடையே பெரும் கவலையும் அச்சமும் தோன்றியுள்ளது.
இந்த மழைக்காலத்தில் அதிகாரிகளே முழுக்க முழுக்கப் பொறுப்பில் இருக்கும் நிலையும் உருவாகியுள்ளது. முதல்வரும் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருப்பதும் மக்களிடையே கவலையை இரட்டிப்பாக்கியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications