மின்வெட்டால் தமிழகம் இருண்ட மாநிலமாகிவிட்டது: மு.க. ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
சென்னை:பல மணிநேரம் மின்வெட்டு ஏற்படுவதால் தமிழகம் இருண்ட மாநிலமாக காட்சியளிப்பதாக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளார் மு.க. ஸ்டாலின் ஏற்காடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாறனை ஆதரித்து 4 நாட்கள் பிரச்சாரம் செய்தார். நேற்று தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அவர் சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் பல மணிநேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் தமிழகம் இருண்ட மாநிலமாக காட்சியளிக்கிறது. 110 விதியின் கீழ் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. சென்னை எம்.கே.பி.நகர் மக்களுக்கு மாற்று இடம் கொடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications