சவுதியில் கை துண்டிக்கப்பட்ட பெண் சென்னை திரும்பினார்- இலவச சிகிச்சைக்கு மகன் கோரிக்கை
சென்னை: சவுதியில் வீட்டு உரிமையாளரால் கை துண்டிக்கப்பட்ட வீட்டு வேலைக்குச் சென்ற பெண் இன்று சென்னை வந்தடைந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு தேவையான மருத்துவ வசதிகளை தமிழக அரசு இலவசமாக செய்து கொடுக்க வேண்டும் என்று அவரது மகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காட்பாடியை அடுத்துள்ள விண்ணம்பள்ளி மூங்கிலேரி கிராமத் தைச் சேர்ந்தவர் கஸ்தூரி. குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த ஜூலை மாதம் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக சென்றார். அங்கு அவருக்கு அதிகப்படியான வேலை கொடுத்து சரியாக உணவு வழங்காமல் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வீட்டின் உரிமையாளரிடம் கேட்டுள்ளார். இது தொடர்பான பிரச்சினையில் கஸ்தூரியின் வலது கையை துண்டித்த வீட்டின் உரிமையாளர் அவரை 3 ஆவது மாடியில் இருந்து இருந்து கீழே தள்ளியுள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலை யில் இருந்த அவரை அருகில் உள்ள வீட்டில் வசித்த இந்தியர் ஒருவர் மீட்டு தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தார். இந்த தகவலை அடுத்து கஸ்தூரியை மீட்டுக் கொடுக்கும்படி அவரது உறவினர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் விசா ரணை நடத்தினர். மேலும், அவரை இந்தியாவுக்கு அனுப்பவும் நட வடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் சவுதியில் இருந்து அவர் இன்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழக அதிகாரிகள் வரவேற்பளித்தனர். முன்னதாக அவருக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து கஸ்தூரியின் மகன் மோகன் கூறும்போது, "அம்மாவிற்கு காலில் எலும்பு முறிவுக்கு போடப்பட்ட கட்டு பிரிக்கப்படவில்லை.
மாடியில் இருந்து கீழே விழுந்ததால் முதுகுப் பகுதியில் வலி அதிகமாக இருப்பதாக கூறினார். அவருக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்திருக்கிறோம். எங்களுக்கு போதிய வருமானம் இல்லை. எனவே, மருத்துவ செலவுகளை இலவசமாக அளிக்க முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும்''என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications