For Daily Alerts
Just In
பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்!
சேலம்: தமிழகத்தில் நடைபெற்று வந்த பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.
பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கடந்த சில நாட்களாக பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். பல இடங்களில் கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சில இடங்களில் கேனில் கொண்டு வந்த பாலை சாலையில் கொட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் செங்கோட்டுவேல், போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக தெரிவித்தார்.
Comments
English summary
Tamil Nadu Milk Producers Welfare Sangam on Thursday withdraw their state wide strike demanding increase in procurement price.
Story first published: Thursday, February 6, 2014, 14:20 [IST]