உடுமலைப்பேட்டை சங்கரின் கிராமத்தில் தேசிய ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு
உடுமலைப்பேட்டை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஜாதி வெறியர்களால் படு கொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் உறவினர்களிடம் தேசிய ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அதேபோல சங்கரின் குடும்பத்தாரிடமும் விசாரணை நடந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கலப்புத் திருமணம் செய்து கொண்ட தலித் இளைஞர் சங்கரும், அவரது மனைவி கவுசல்யாவும் உடுமலைப்பேட்டையில் கடைக்குப் போய்க் கொண்டிருந்தபோது தாக்குதலுக்குள்ளானார்கள்.

3 பேர் கொண்ட கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டியது. இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். கவுசல்யா படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் ஆகியவை தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளன.
இந்த நிலையில் சங்கரன் சொந்த ஊரான உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள கொமரலிங்கம் கிராமத்திற்கு தேசிய ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் சந்திரபிரபா, லிஸ்டர் ஆகியோர் வருகை தந்தனர். அங்கு சங்கரின் குடும்பத்தார், உறவினர்கள், கிராமத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் காவல்துறையினரையும் சந்தித்து இந்த வழக்கில் எஸ்சி எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று கேட்டறிந்தனர். மேலும் கலெக்டரையும் சந்திக்கவுள்ளதாக குழுவின் தலைவரான சந்திரபிரபா கூறினார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications