சட்டசபை கூட்டத்தை நீட்டிக்க கோரிக்கை.. நிராகரித்த சபாநாயகர்- தி.மு.க, தே.மு.தி.க. கம்யூ. வெளிநடப்பு!
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடரை நீட்டிக்க வலியுறுத்தி தி.மு.க., தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர் இதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்த காரணத்தால் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. இன்று சட்டப்பேரவை கூடியதும் முதலில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 6 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின் தமிழக சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத் தொடருக்கான நாட்களை நீட்டிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
கூட்டத்தொடரை 3 நாட்கள் மட்டுமே நடத்த எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் முழக்கங்களை எழுப்பி தி.மு.க. தே.மு.தி.க. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் தனபாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு, அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மாற்ற முடியாது என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார். இதையடுத்து, சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. தே.மு.தி.க. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.