For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாற்றத்தை விரும்பி விஜயகாந்திற்கு வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம்: சீமான்

By Siva
Google Oneindia Tamil News

TN people got disappointed voting for Vijayakanth: Seeman
நாமக்கல்: மாற்றம் வேண்டும் என்பதற்காக தமிழக மக்கள் விஜயகாந்திற்கு வாக்களித்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூரில் நடந்த கொடியேற்று விழாவில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழகத்தில் உள்ள திராவிட அரசியல் கட்சிகளுக்கு எந்தவித நிலைப்பாடுமே இல்லை. அந்த கட்சிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் தான் அறிக்கைகள் வெளியிடுகின்றன. மக்கள் பிரச்சனைகளை அரசு கையில் எடுக்காவிட்டால் அரசை மக்களே கையில் எடுப்பதை தவிர வேறு வழி இல்லை. காங்கிரஸ் அரசின் 10 ஆண்டு கால அரசியல் மக்களை எரிச்சலடைய வைத்துள்ளது. இதற்கு டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றி தான் முன் உதாரணம்.

தமிழக மக்கள் மாற்றம் வேண்டும் என்று விஜயகாந்திற்கு வாக்களித்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. முதலில் இலவசங்களை ஒழித்தாக வேண்டும். புரட்சியால் தான் ஆட்சியை சரி செய்ய முடியும் என்றார்.

English summary
Naam Tamilar party chief Seeman told that people voted for DMDK leader Vijayakanth seeking a change in the state. But the voters got disappointed by voting for him, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X