சேகர் ரெட்டி விவகாரத்தில் ரொம்பவே பதறிய தென் தமிழக தலைவர்
சேகர் ரெட்டி விவகாரத்தில் ரொம்பவே பதறிய தென் தமிழக தலைவர் பற்றிய செய்தி இது,
சென்னை: சேகர் ரெட்டியிடம் பணம் பெற்றவர்கள் பட்டியல் வெளியான போது தென் தமிழகத்தின் தலைவர் ஒருவர் ரொம்பவே பதறிப் போய்விட்டாராம்.
சேகர் ரெட்டி மீது வருமான வரித்துறை கை வைத்த போது அதிமுக தலைவர்கள் மட்டுமல்ல பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அடிவயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருந்தார்களாம். தென் தமிழகத்தைச் சேர்ந்த அந்த தலைவரும் விதிவிலக்கு அல்லவாம்.

பின்னர் வருமான வரித்துறை கைப்பற்றிய ஆவணங்கள் என சேகர் ரெட்டியின் டைரி ஒன்று ரிலீஸ் செய்யப்பட்டது. அதில் பெரிய, சிறிய கட்சி தலைவர்களுக்கு மாதந்தோறும் கப்பம் போய்க் கொண்டிருந்த விவரம் இடம்பெற்றிருந்தது.
அப்பட்டியல் வெளியான போது ரொம்பவே பதறிய தென் தமிழகத் தலைவர் ஒருவர், சேகர் ரெட்டியின் பிஏவுக்கு போனடித்திருக்கிறார். என்னய்யா ஒரு ஆவணத்தைக் கூட பாதுகாப்பாக வைக்க முடியாதா? எங்க கணக்கு எல்லாம் வந்துவிடுமா? என உறுமலும் செருமலுமாக பதறியிருக்கிறார்.
சேகர் ரெட்டி தரப்போ, சார் உங்க கணக்கு எல்லாம் செளத் அக்கவுண்ட்... அதையெல்லாம் நாங்க கிளியர் செய்துவிட்டோம்... கவலைப்படாதீங்க என கூறியுள்ளார். அப்போதுதான் அந்த முகத்தில் களையே வந்ததாம்.












Click it and Unblock the Notifications