ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு 324 ஏக்கர் சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கீடு... சிப்காட்டுக்கு நோட்டீஸ்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதா என்று விளக்கம் அளிக்குமாறு சிப்காட்டிற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அளித்துள்ளது.
Recommended Video

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சட்டவிரோதமாக 324 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதா என்ற விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சிப்காட்டிற்கு நோட்டீஸ் அளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதியில் மக்கள் வாழவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குழந்தைகள், பொதுமக்கள் என இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாசப் பிரச்னை மற்றும் புற்றுநோய் அபாயம் இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை முழுவதுமாக மூட வலியுறுத்தியும் குமரெட்டியாபுரம் பகுதி மக்கள் 51வது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சிப்காட் சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி சிப்காட் நிறுவனம் விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்பட உள்ள 624 ஏக்கர் நிலத்தில், 324.23 ஏக்கர் நிலத்தை 99 வருட குத்தகைக்கு சிப்காட்டிடம் இருந்து ஸ்டெர்லைட் நிறுவனம் பெற்றுள்ளது.
சிப்காட் 2 என்ற புதிய தொழில்பூங்கா செயல்பட அரசு இன்னும் அனுமதி வழங்காத நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆலை விரிவாக்கத்திற்காக எப்படி நிலம் ஒதுக்கப்பட்டது. சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்ட நிலத்தில் எப்படி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளை தொடங்கியது என்பன உள்ளிட்ட கேள்விகளை சிப்காட்டிற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட சிப்காட் திட்ட இயக்குனர் விளக்கம் அளிக்கும்படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரியுள்ளது. மக்களின் போராட்டம் 50வது நாளை எட்டியுள்ள நிலையில் இப்போது தான் சட்டவிரோதமாக ஸ்டெர்லைட்டுக்கு ஆலை விரிவாக்கத்திற்காக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போன்று ஸ்டெர்லைட் ஆலையில் இன்னும் எத்தனை சட்டவிரோத செயல்பாடுகள் இருக்கிறதோ தெரியவில்லையே.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications