For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகாவை கண்டித்து தமிழகம், புதுவையில் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

By Mathi
Google Oneindia Tamil News

திருவாரூர்/ புதுச்சேரி: தமிழருக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ள கர்நாடகாவைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுவையில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீரை தர மறுத்து வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது கர்நாடகா. கன்னட அமைப்பினர் தமிழக வாகனங்களையும் தமிழர்களையும் தாக்கி வருகின்றனர்.

TN, Pudhuvai students protest against Karnataka

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தமிழக இளைஞரைத் தாக்கிய கன்னட கும்பலை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர்.

இதேபோல் புதுவையிலும் போராட்டம் நடைபெற்றது. புதுவையில் இருந்து மும்பை செல்லும் ரயிலை சட்டக் கல்லூரி மாணவர்கள் மறித்து போராட்டம் நடத்தினர்,.

நெல்லை மாணவர்கள்

இதேபோல் நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் கர்நாடகாவைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

English summary
Tamilnadu and Pudhucherry college students held protest against Karnataka on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X