அத்திக்கடவு - அவினாசி திட்டம்.. ரூ. 3523 கோடியில்.. அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தகவல்
சென்னை: அத்திக்கடவு - அவினாசி பாசனத் திட்டம் ரூ. 3523 கோடி மதிப்பட்டில் நிறைவேற்றப்படும் என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதைக் கொண்டு வந்து அவர் பேசுகையில்,

அத்திக்கடவு-அவினாசி நீர்ப்பாசன திட்டத்தை நிறைவேற்றினால் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்கள் பெரியளவு பயன்பெறும். பவானி ஆற்றில் இருந்து வருடம் தோறும் 30 டி.எம்.சி. தண்ணீர் பில்லூர் சென்று கடலில் கலக்கிறது. இதை தடுத்து நீர் பாசன திட்டத்துக்கு பயன்படுத்தினால் பொதுப்பணி துறைக்குரிய 31 ஏரிகளும், பஞ்சாயத்துக்கு உட்பட்ட 40 குளங்களும், 538 குட்டைகளும் நிரம்பும். இந்த திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தற்போது அரசு இந்த திட்டத்துக்காக ரூ.3.27 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறது. இந்த நிதி எந்த அளவில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அரசு இந்த திட்டத்தை நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது என்றார் ஸ்டாலின்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அத்திக்கடவு- அவினாசி திட்டம் 2011-12-ல் ரூ.1,862 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டது. மத்திய அரசிடம் அனுமதி பெறுவதற்காக இது அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசு இதை நீர்பாசன திட்டமாக மாற்றி அனுப்பும்படி கேட்டுக்கொண்டது. இதையடுத்து மத்திய நீர்குழுமத்துக்கு 2016-17-ம் ஆண்டு நிதியாண்டில் நீர் பாசன திட்டமாக மாற்றி அனுப்பப்பட்டது. இதற்கான அனுமதி கிடைத்து உள்ளது.
இந்த திட்டத்தை நிறைவேற்ற 1,697 ஏக்கர் பட்டா நிலம், 28 ஏக்கர் வனத்துறை நிலம், தேவைப்படுகிறது. இதை கையகப்படுத்துவதற்கு ரூ.3.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய திட்டத்தின் மதிப்பீடு ரூ.3,523 கோடி. தற்போது வனத்துறை, சுற்றுச்சூழல் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications