ஆள் மாறாட்டத்தை இப்படித்தான் தடுக்கப் போகிறோம்.. விளக்குகிறார் நெல்லை சார்பதிவாளர்
நெல்லை: பத்திரப்பதிவின்போது ஆள் மாறாட்டத்தைத் தடுக்கும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் மூலம் இனிமேல் பத்திரப்பதிவின்போது ஆள் மாறாட்டம் செய்வது உள்ளிட்ட மோசடிகள் முற்றிலும் தவிர்க்கப்படும், தடுக்கப்படும்.
இந்த ஆள் மாறாட்டட, போலி ஆவண தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நெல்லை பாளையங்கோட்டை இணை சார்பதிவாளர் ரவிசங்கர் கூறியுள்ளதாவது...

9 மண்டல பத்திரப்பதிவு அலுவலகங்கள்
தமிழகத்தில் சென்னையை தலைமை இடமாக கொண்டு 9 மண்டல பத்திர பதிவு அலுவலகங்கள் உதவி பதிவு துறை தலைவர் தலைமையில் இயங்கி வருகின்றன. இவற்றின் கீழ் 50 மாவட்ட பதிவாளர் அலுவலங்களும், 578 சார் பதிவாளர் அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.

அந்தக் காலத்தில் கைநாட்டும், கையெழுத்தும் மட்டுமே
ஒரு காலத்தில் பத்திரப்பதிவின் போது கைரேகை, கையொப்பம் மட்டுமே பெறப்பட்டு வந்தன. இதன் மூலம் முறைகேடுகள் அதிகம் நடந்ததால் போட்டோ ஓட்டும் முறை அமுலுக்கு வந்தது.

புகைப்படம் ஒட்டுவதிலும் போர்ஜரி
இதிலும் சில சமயம் ஆள்மாறாட்டம் மூலம் போலியாக ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதை தவி்ர்க்கும் வகையில் வெப் கேமரா உதவியுடன் பத்திர பதிவு அலுவலகங்களிலேயே படமெடுக்கும் முறையும், மின்னனு ரேகை பதிவு்ம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இனிமேல் வெப் காமரா படம் பிடிக்கும்
இதற்காக அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் வெப் கேமரா மற்றும் மின்னனு ரேகை பதிவு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. நவம்பர் 1 முதல் அவை சோதனை முறையாக அமுலுக்கு வந்துள்ளன.

ரேகையுடன், புகைப்படமும்
இதன்படி பத்திரம் பதிவு செய்ய வருவபர் மற்றும் சொத்து வாங்குபவரின் புகைப்படமும், விரல் ரேகையும் அந்த பத்திரத்துடன் இணைத்து வழங்கப்படும். இந்த முறை தமிழகம் முழுவதும் நவம்பர் 18ம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது.

மை ரேகை நவ. 17ம் தேதியுடன் கடைசி
ஆள் மாறாட்டம், போலி பத்திர பதிவுகளை தடுக்கும் வகையில் இந்த திட்டம் தமிழக அரசு சார்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் நடைமுறையில் உள்ள போட்டோ ஓட்டும் முறை, மை மூலம் ரேகை வைக்கும் முறை ஆகியவை நவம்பர் 17ம் தேதியுடன கைவிடப்படும். நவம்பர் 18ம் தேதி முதல் புதிய நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்படுகிறது.

ரேகைப் பதிவு பாதுகாக்கப்படும்
இந்த புகைப்படம், மின்னனு ரேகை பதிவு மற்றும் பதிவுக்குறிய நம்பர் போன்றவை பாதுகாப்பாக வைக்கப்படும். பின்னர் சொத்தை விற்கும்போது அந்த ஆவண நம்பருடன் ஓப்பிட்டு புகைப்படம் மற்றும் மின்னனு ரேகை ஆகியவற்றை சரிபார்த்த பின்னரே மீண்டும் அந்த சொத்தை விற்க முடியும்.

இனிமேல் தில்லுமுல்லுக்கு இடமில்லை
இதனால் இனிமேல் தில்லுமுல்லு பண்ண வழியே இல்லை என்று ரவிசங்கர் தெரிவி்த்தார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications