தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.. சென்னையில் மேகமூட்டம்தான்- வானிலை மையம்
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது. இதனால் சென்னையில் 10 நாள்களாக விட்டு விட்டு மழை வெளுத்து வாங்கியது. தமிழகத்திலும் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டியது.

நாகப்பட்டினத்தில் இதுவரை பெய்ய வேண்டியதைவிட 65 சதவீதம் அதிகமாகவும், சென்னை மாவட்டத்தில் 55 சதவீதம் அதிகமாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் 51 சதவீதம் அதிகமாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 39 சதவீதம் அதிகமாகவும், கடலூர் மாவட்டத்தில் 27 சதவீதம் அதிகமாகவும் மழை பெய்துள்ளது.
நேற்று சென்னையில் வெயில் காய்ந்தது. இந்நிலையில் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுப்பெற்று காற்றழுத்த மண்டலமாக மாறி உள்ளது.
அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்து 240 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனால் இதன் காரணமாக தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.
வியாழக்கிழமை (இன்று) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். இதே வானிலைதான் 19-ஆம் தேதி வரை நிலவும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications