நடிகர் விஜய்க்கு தூண்டில் போடுதாம் தமிழக காங்.. .வந்தால் மனதார வரவேற்பாம்!
சென்னை: நடிகர் விஜய், காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் மனதா வரவேற்போம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தொடர்பான சர்ச்சைகளில் முதல் ஆளாக தலையிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது தமிழக காங்கிரஸ். பிகில் பட சர்ச்சையில் விஜய்யை அதிமுகவினர் கடுமையாக விமர்சித்தனர்.

அப்போது விஜய்க்கு தமிழக காங்கிரஸ் கமிட்டிதான் ஆதரவாக குரல் கொடுத்தது. அண்மையில் விஜய் வீட்டில் வருமான வரிசோதனை நடைபெற்றது.
அந்த சூழ்நிலையிலும் விஜய்க்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டிருந்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி. இதனால் விஜய், தமிழக காங்கிரஸில் சேருவாரா? என்கிற கேள்வியையும் ஊடகங்கள் எழுப்பின.
இதற்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, வருமான வரித்துறை விவகாரத்தில் ரஜினிகாந்துக்கு கால அவகாசம் கொடுத்தனர். ஆனால் விஜய்க்கு அப்படி எதுவும் கொடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு நடிகர் விஜய் வந்தால் அவரை மனதாக வரவேற்போம் என கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தொடர்பான சர்ச்சைகளில் முதல் ஆளாக தலையிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது தமிழக காங்கிரஸ். இதனால் விஜய், தமிழக காங்கிரஸில் சேருவாரா? என்கிற கேள்வியையும் ஊடகங்கள் எழுப்பின. இதற்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் கட்சிக்கு நடிகர் விஜய் வந்தால் அவரை மனதாக வரவேற்போம் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications