சரி தீர்ப்பு வந்துருச்சு... என்ன செய்ய? கர்நாடகாவின் குரலில் பேசி ஷாக் கொடுக்கும் தமிழக காங். தலைவர்
கர்நாடகாவின் குரலில் பேசி காவிரி விவகாரத்தில் அதிர்ச்சி தருகின்றனர் தமிழக காங்கிரஸ் தலைவர்கள்
Recommended Video

சென்னை: காவிரி நதிநீர் தீர்ப்பு விவகாரத்தில் கர்நாடகாவின் குரலிலேயே பேசி அதிர்ச்சி அடைய வைக்கின்றனர் தமிழக காங்கிரஸ் தலைவர்கள்.
காவிரி தீர்ப்பில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. இடைக்கால தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு, தற்போதைய தீர்ப்பு என அடுத்தடுத்து காவிரியில் தமிழகத்தின் உரிமைக்கு வேட்டு வைக்கப்பட்டுவிட்டது.

காவிரி டெல்டா இனி என்னவாகுமோ? என பதறிப் போயுள்ளது தமிழகம். அப்படியே 15 டிஎம்சி நீரை கர்நாடகாவுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டு தவிக்கிறது தமிழகம்.
ஆனால் காவிரி தீர்ப்புக்கு கருத்து தெரிவிக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசாராகட்டும், கே.எஸ். அழகிரியாகட்டும், தமிழகத்தின் அளவு குறைத்தது தப்புதான்.. வருத்தம் என்பதோடு நிறுத்திக் கொள்வதில்லை. சரிங்க தீர்ப்பு வந்துருச்சு என்ன செய்ய என ஏற்றுக் கொள்வோம் என்றே பேசுவதுதான் அதிர்ச்சியாக உள்ளது.
கர்நாடகாவில் எங்கள் அரசுதான் உள்ளது; நிச்சயம் 177.25 டிஎம்சி நீரை நாங்கள் போராடி பெற்றுத் தந்தே தீருவோம் என முழங்குகிற திராணி, காவிரி நீரை பெற்றுத்தருகிற துணிச்சல் இந்த காங்கிரஸுக்கு கிடையாது. அதனால்தான் தமிழகத்தில் காயலான் கடை பொருள் போல காலவதியாகிக் கிடக்கிறது.
பாஜகவைப் போலவும் கர்நாடகாவைப் போலவும் தமிழகத்தில் தொடர்ந்து காங்கிரஸ் பேசிவந்தால் கொஞ்ச நஞ்ச கிளைகளும் துடைத்து தூரப்போடும் நாளும் தொலைவில் இல்லை என்பதை காங்கிரசார் புரிந்து கொள்ளட்டும்!
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications